| 23. கருணைப்பிரகாசசுவாமிகள் |
|
| |
சோதி மாமரஞ் சுடுதழற் பிழம்பென் றிளமட மந்தி யேறா தகலுந் திருக்கா ளத்தியா முருக்கிளர் பொருப்பும் மீன்கணத் தகவயின் விளங்குவெண் டிங்களின் 160 ஒழுகொளி நித்திலக் குழுவினுள் வலம்புரிச்
|
(32) |
| |
| |
சங்குகிடந் துறங்கும் பொங்குபுனற் பழனத்துக் கரும்படு களம ரிரும்பு கைவிடுத் தடிபெயர்த் தோடிக் குடவளை யிடறி எழுநீர்ப் பசுந்தாட் கழுநீர்க் குப்பையுள் 165 வண்டினம் வெரீ இயொலி கொண்டெழ வீழ
|
(33) |
| |
| |
நெடுநெறிக் கரும்பி னெருக்கிடைக் கிடந்த கடுவரா லுகளுங் கம்பலை யவியா ஒருவாச் செல்வத் திருவா ரூரும் ஆரங் குங்கும மகில்கரி மருப்புப் 170 பொன்மணி முதலிய பொருதிரைக் கையால்
|
(34) |
| |
| |
விரிபொழில் நிமிர்ந்ததன் னிருகரை மருங்கினும் வாழ்நர்க் குதவு மணிமுத் தாறெனும் பெருநதி யுடுத்த திருமுது குன்றமும் வரைபக வெறிந்து மாமுத றடிந்த 175 மணிநெடு வேலொடு வளர்பூங் குடுமி
|
(35) |
| |
| |
முள்ளுடை நெடுந்தாட் புள்ளணி கொடியோன் வள்ளிபுரை மருங்குல் வள்ளிமா துக்குஞ் சேயரி நெடுங்கட் டெய்வயா னைக்குங் காணியென விளங்கும் பூணணி மார்போன் 180 அருணனி சுரக்கு மறுமுகத் தொருவன்
|
(36) |
| |
|
| |
32. தழற்பிழம்பு-தீச்செறிவு. 158. உருக்கிளர்-அழகு விளங்குகின்ற. 159. அகவயின்-நடுவிடத்தில். 33. குடவளை-குடம்போன்ற சங்கு. 165. வெரீஇ-அஞ்சி.34. கம்பலை அவியா-ஒலி நீங்காத. உகளும்-புரளும். 168. ஒருவா-நீங்காத. 35. வரைபக-மலை பிளக்க. 36. புள்ளணி கொடியோன்-சேவற் கொடியோன்.
|
|
|
|