23. கருணைப்பிரகாசசுவாமிகள் |
|
|
தன்னிக ரில்லாத் தனிமுதற் கடவுள் வெட்சிமலர் சூழ்ந்ததன் விரைமலர்த் திருவடி உள்ளுநர் தமக்குங் கள்ளவிழ் சேயிதழ் அல்லியந் தாமரைச் செல்வனும் வணங்கும் 185 பெறலரு மரசு பெறவினி தளிப்போன்
|
(37) |
|
|
தேங்கமழ் கடம்பின் றெரிய றுயல்வரூஉம் பன்னிரு தடந்தோட் பண்ணவ னிருந்த பனியிரு விசும்புதோய் பரங்குன் றிழியும் மணியருவி கொழித்த மணிகிடந் திமைக்குந் 190 திருமலி மறுகிற் செந்தமிழ்க் கூடலும்
|
(38) |
|
|
தமிழ்குடி யிருந்த தடவரைத் தோன்றி இமிழ்திரை ஞாலத் தமிழ்தெனக் கிடந்த தண்பொருநை யுடுத்த விண்பொரு நெடுமதில் நெல்லையு முதலிய பல்பெரும் பதிகள் 195 அனைத்தினுங் கண்டோர்க் ககற்றரும்
|
(39) |
|
|
196. வினைத்தொடர் பகல வீற்றிருந் தெனவே.
|
(40) |
|
|
|
37. உள்ளுநர்-எண்ணுபவர். 38. துயல் வரூஉம்-அசையும். 39. தமிழ் குடியிருந்த தடவரை-பொதிய மலை. 192. இமிழ்திரை-ஒலிக்கின்ற அலை.40. தமிழ் குடியிருந்த தடவரை-பொதிய மலை. 192. இமிழ்திரை-ஒலிக்கின்ற அலை.
|
|
|
|