முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
2. நால்வர் நான்மணி மாலை
நேரிசை வெண்பா
மகிழ்ச்சி மிகவுண்டு போலுமெதிர் வந்து
புகழ்ச்சியொடு நீபாடும் போது - நெகிழ்ச்சிமலர்ச்
சந்தையினும் வண்டிரையுந் தண்புகலிச் சம்பந்தா
தந்தையினும் பால்கொடுத்த தாய்க்கு.
(13)

13. மகிழ்ச்சி மிக வுண்டென்றது பாடிய திருநெறித் தமிழினருமையையும் தேவியாரளித்த ஞானப்பால் அதற்கேது வாதலையும்குறித்தென்க. போலும்-ஒப்பில் போலி. சந்தை-பலபண்டமுங் கொள்வான் குழுமும் சனத்தொகுதி; வேதச்சந்தையுமாம். மலரில் இரையும் என்க. புகலி-சீர்காழி.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்