2. நால்வர் நான்மணி மாலை |
|
நேரிசை வெண்பா |
|
|
கொள்ளைகொள்ள வீடுதவிக் கூற்றைப் பிடர்பிடித்துத் தள்ளுந் திருஞான சம்பந்தா-வெள்ளமிடும் ஏடேறப் பால்குறைந்த தென்றழுவ ரேகழுவின் காடேறப் புக்கவரு கர்.
|
(21) |
|
கட்டளைக் கலித்துறை |
|
|
அருகக் கடல்கடந் தேறிய தோசிலை யம்பியெனப் பெருகக் கடல்கடந் தேறிய தோசொல் பெருமிடறு கருகக் கடல்விட முண்டோ னடியிற் கசிந்துமனம் உருகக் கடலன்பு பெற்றசொல் வேந்த வுனக்கரிதே.
|
(22) |
|
|
|
21. பிடர்பிடித்துத் தள்ளுதல்-அணுகாதகற்ற லென்னும் பொருட்டாய் உலகவழக்குப் பற்றி வந்தது. ஏடேறப் பால்குறைந்ததென்பதும் அருகரென்பதும் இரட்டுறமொழிதல். கழுவின்காடு-ஆயிரக்கணக்கான சமணர்கட்டு ஆயிரக்கணக்கானகழுக்கள் அமைக்கப்பட்டனவாதலின் கழுவின் காடு என்றார். 22. ஆவது செய்யுளாலுமுணர்க. ஓகாரமூன்றும் வினாப்பொருளவேனும் இறுதியது பிரிநிலையுமாம். போதம்-ஞானப்பால். பொருகண்-போர்செய்கின்ற கண். 20. அடியார் மெய்யன்பு-அடியார் பாற்கொள்ளும் உண்மையன்பு. வித்தக, கொள்வோய், அருளல் வேண்டும் எனவியையும். அலந்தேன்-கவலைகொண்டேன். கோடல்-கொள்ளுதல். 21. பிடர்பிடித்துத் தள்ளுதல்-அணுகாதகற்ற லென்னும் பொருட்டாய் உலகவழக்குப் பற்றி வந்தது. ஏடேறப் பால்குறைந்ததென்பதும் அருகரென்பதும் இரட்டுறமொழிதல். கழுவின்காடு-ஆயிரக்கணக்கான சமணர்கட்டு ஆயிரக்கணக்கானகழுக்கள் அமைக்கப்பட்டனவாதலின் கழுவின் காடு என்றார். 22. வினாப்பொருளவோகாரமிரண்டும் முறையே உயர்வினும் இழிவினும் வந்தன. அரிதுசொல் என்க. அம்பி-ஓடம். மிடறு-கண்டம்.
|
|
|
|