2. நால்வர் நான்மணி மாலை |
|
கட்டளைக் கலித்துறை |
|
|
ஊர்ந்து வருமிள வேறுடை யான்ற னுளத்தருளாற் சார்ந்து சமண்வீட் டுறுமுனக் கேவருஞ் சைவநலங் கூர்ந்து மிளிர்தரு நாவர சேநல் குரவுமுனஞ் சேர்ந்து மருவினர்க் கேசிறந் தோங்குறுஞ் செல்வமுமே.
|
(34) |
|
அறுசீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம் |
|
|
செல்வநல் லொற்றி யூரன் செய்யசங் கிலியா லார்த்து மல்லலம் பரவை தன்கண் மாழ்குற வமிழ்த்து மேனும் அல்லுநன் பகலு நீங்கா தவன்மகி ழடியி லெய்தி நல்லவின் படைந்தி ருப்ப னம்பியா ரூரன் றானே.
|
(35) |
|
நேரிசை யாசிரியப்பா |
|
|
தானே முத்தி தருகுவன் சிவனவன் அடியன் வாத வூரனைக் கடிவின் மனத்தாற் கட்டவல் லார்க்கே.
|
(36) |
|
|
|
34. உனக்கே மிளிர்தருமென இயையும். இழந்து பெற்றார்க்கே நன்கு விளங்குமென்பது. வருஞ் சைவநலம்-சின்னாளகன்று பின்னர்ச் சேர்ந்த அச்சைவத்தின் சிறப்பு. கூர்ந்து மிளிர்தரும் என்பதனை நாவுக்கடையாக்கிச் சைவநலம் வரும் என்றலுமாம். ஊர்ந்து-செலுத்தி. வீட்டுறும்-விட்டுநீக்கும். 35. இருவரையும் தாமவாவிய வாசனையகலத் திரோபவித்து இங்ஙனஞ் சேர்த்தினாரேனும் அவ்வின்பத்தைச் சிற்றின்பமாக நுகர்ந்தனரென்பது. மகிழடி-மகிழ்ச்சியைப் பயக்குந் திருவடி, மகிழமரத்தடி என இரட்டுறமொழிக. இருத்தல்-கைலைக்கண் வதிதல். இதுநிந்தாஸ்து தியாகவும் நிற்பதோர்க. ஆர்த்து-பிணித்து. மல்லல்-வளப்பம்; அழகு. சங்கிலியாற் கட்டிக்கடலில் தள்ளினாலும் அதனால் துன்புறாது இன்பத்தையே யடைந்திருப்பன் என்றும் பொருள்தொனித்தலையுங் காண்க. 36. வல்லார்க்கே தருகுவனென இயையும். தற்போதமிழந்து இறைவர் பணியினின்றாராகலின் இவரை வழிபடுவார்க்கு அவ்விறைவரே முத்தியளிப்பரென்பது. கடிவு-நீக்கம்.
|
|
|
|