முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
2. நால்வர் நான்மணி மாலை
நேரிசை யாசிரியப்பா
செய்ய வார்சடைத் தெய்வ சிகாமணி
பாதம் போற்றும் வாதவூ ரன்ப
பாவெனப் படுவதுன் பாட்டுப்
பூவெனப் படுவது பொறிவாழ் பூவே.
(40)

40. இப்பாவால், பூவிற் சிறந்தது செந்தாமரை யாதல் போல, பாவிற் சிறந்தது வாதவூரர் பாவே என்பர். வார்-நீண்ட, தெய்வசிகாமணி-தெய்வங்கட்குத் தலைவன் சிவபெருமான். பூ. இங்குச் செந்தாமரைப் பூ. இது மிகுந்த அழகுடையது. இதன் அழகைக் கண்டே திருமகள் இதில் உறைகின்றனள் என்பர் கோவையுரையாசிரியர். பொறி-திருமகள்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்