3. திருச்செந்தில் நிரோட்டக யமகவந்தாதி |
|
|
தினகர னந்த நனியிலங் காநின்ற செய்யநற்செந் தினகர னந்த நிதியா யினனடற் சீரயிலேந் தினகர னந்த கனைச்செற்ற தாளர் திகழ்கனகா தினகர னந்த நடனர் தனயனென் சிந்தையனே.
|
(2) |
|
|
சிந்தனை யாகத் திசையந் தணர்க்கிறை சேரகங்க சிந்தனை யாகத் தரையளித் தாடரை சென்றிரந்த சிந்தனை யாகத் திடையியைந் தான்றந்த சேயளியாற் சிந்தனை யாகத்த நற்செந்தி லாய்நினைச் சேர்ந்தனனே.
|
(3) |
|
|
தனத்தலங் கார நிறைநா ரியரந் தரத்தசைகே தனத்தலங் கார நிகழரங் காடச்செய் தன்னினயத் தனத்தலங் கார தராயியங் கத்தக்க தண்செந்திற்கந் தனத்தலங் காரனை யானய னேத்திடத் தங்கினனே.
|
(4) |
|
|
தங்கந் தனங்க ளடையத் தனியெனைத் தள்ளியங்கே தங்கந் தனங்க டரச்சென் றனரறிந் தாரிலைகா தங்கந் தனங்க ளலர்காக்க ணாரெழிற் றண்செந்திலார் தங்கந் தனங்க நிகர்செக்கர் செய்சஞ் சலத்தினையே.
|
(5) |
|
|
சலந்தர னாகந் தரித்தார்தந் தாதன் றனதிடைச்சஞ் சலந்தர னாகந் தரைநடந் தாலெனச் சார்ந்ததண்டன் சலந்தர னாகந் தளரச்செற் றார்தன யன்றலநச் சலந்தர னாகந் தனக்கிறை சேர்செந்திற் சார்ந்திடற்கே.
|
(6) |
|
|
|
2. தினகரன் நந்த-கதிரவன் ஒளிகுன்றுமாறு. அடற்சீர் அயில் ஏந்தின கரன்-வலிமை பொருந்திய சிறப்பாகிய வேற்படையைத் தாங்கின கையை உடையவர். அந்தகன்-நமன். செற்ற-அழித்த. நகர் அனந்தன்-அசைகின்ற ஆதிசேடன். நடனர்-அம்பலவாணர். 3. சிந்தனை-எண்ணம். அகம் கசிந்து-மனம் நெகிழ்ந்து. அனை-அன்னை, தாய். தரைஅளித்தாள்-உலகத்தைப் பெற்றவள். இரந்த சிந்தன்-யாசித்த குறள்வடிவத் திருமால். அளியால் சிந்து அனையாய்-அருளால் கடலைப் போன்றவரே. கத்த-தலைவனே. 4. தனம்-கொங்கை. நாரியர்-பெண்கள். அந்தரம்-விண். கேதனம்-கொடி. அரங்கு ஆட-அவையில் நடிக்க. செய்-வயல். நத்து-சங்கு. அலம் கார் அதராய்-கலப்பைச்சாலில் நிற்கின்ற நீரின் வழியாக. கார் அனையான்-திருமால். அயன்-நான்முகன். 5. தங்கம்-பொன்போன்ற நிறத்தையுடைய தேமல். அம் தனங்கள்-அழகிய பொருள்கள். காதம்-காததொலை. கந்தம்-மணம். அங்கம் நிகர் செக்கர்-உடலைப் போன்ற செவ்வானம். சஞ்சலம்-துன்பம். 6. சலம் தரம் நாகம் தரித்தார்-கங்கையையும் தலைமாலையையும் பாம்பையும் அணிந்தவர். தாதன்-மார்க்கண்டன். சஞ்சலம்தர-துன்பத்தைக் கொடுக்க. நாகம்-யானை. தண்டன்-நமன். சலந்தரன் ஆகம்-சலந்தரன் என்பவனுடைய உடல். நச்சலம்-விரும்பினோமில்லை.
|
|
|
|