| 3. திருச்செந்தில் நிரோட்டக யமகவந்தாதி |
|
| |
சாரங்கஞ் சங்கரி கட்சிச்சித் தேய்ந்தகைச் சங்கரனார் சாரங்கஞ் சங்கரி தாஞ்சக் கரங்கையிற் றாங்கினன்சேய் சாராங்கஞ் சங்கரி யாநண் ணினர்க்கந்தத் தந்திரத்தா சாரங்கஞ் சங்கரி தேயெனச் செய்நின் சரண்டந்ததே.
|
(7) |
| |
| |
தந்தனஞ் சங்கை யணிகரர் சேர்க்கத் தடங்கணலை தந்தனஞ் சங்கை யலரென்செய் யாடங்கச் சற்சனர்நித் தந்தனஞ் சங்கை யகலறத் தீசெந்திற் சார்கதனித் தந்தனஞ் சங்கை யநக னிளையனற் றாடரற்கே.
|
(8) |
| |
| |
தரங்கனந் தார னனியேற் றெழிற்செந்திற் றந்தைநிரந் தரங்கனந் தாரக நாடினென் றேநினை சத்தியரந் தரங்கனந் தார நகரீசர் சேய்கிரித் தையலர்க்கந் தரங்கனந் தாரள கஞ்சிற் றிடைசல சங்கண்களே.
|
(9) |
| |
| |
சங்கங் களங்கழ னிக்கரை சேர்செந்திற் றங்கினநஞ் சங்கங் களங்கர நண்ணரன் சேயெய்தச் சார்ந்தனஞ்சற் சங்கங் களங்க னியைநிகர் தண்ட தரற்கினிய சங்கங் களங்க ரெனநின்ற யாங்கணெஞ் சங்கரைந்தே.
|
(10) |
| |
| |
கரத்தரிக் கங்கணங் கட்டர னார்தந்த கந்தாழ கரத்தரிக் கங்கணங் கண்டசெய்ச் செந்திலெங் காங்கெயர்சா கரத்தரிக் கங்கணங் கட்கய னார்க்கெழிற் காசணிசே கரத்தரிக் கங்கணங் கற்றிடத் தாங்கினர் கைச்சத்தியே.
|
(11) |
| |
|
| |
7. சாரங்கம்-மான். சங்கரி-இறைவி. சாரங்கம்-சார்ங்கம் என்னும் வில். தாங்கினன்சேய்-காமன். சார் அங்கம்-பொருந்தியஉடல். சங்கரியா-கொன்று. ஆசாரம்-சீலம். கஞ்சம்-தாமரை. 8. சங்கை அணிகரர்-வளையலையணிந்த கையை உடைய பெண்கள். தடங்கண்-விசாலமானகண். அலைதந்தனம்-அலைந்தோம். செய்யாள்-திருமகள். சங்கை அகல் ஐயம் நீங்கிய. தனித்தந்தன்-ஒற்றைக் கொம்பை யுடையவன். அருகன்-தீவினையற்றவன். 9. தரங்கம்-அலை. நந்து-சங்கு. ஆரல்-மதில். நிரந்தரம்-எக்காலத்தும்: தாரகம்-பிரமவடிவம். அந்தரம் நந்தார்-அந்தரங்கத்திலே கெடுதலின்றி விளங்குகின்றவர். சேய் கிரித்தையலர்-முருகனுடைய மலையில் இருக்கும் பெண். தார் அளகம் கனம்-மாலையை அணிந்த கூந்தல் முகிலைப் போலும். சிற்றிடை அந்தரம்-சிறிய இடை விண்ணைப் போன்றது. சலசம்-தாமரை. 10. சங்கங்கள்-சங்குகள். நஞ்சம்-நஞ்சு. கம்-தலை. களம்-கழுத்து. கரம்-கை. நண்-பொருந்திய. சற்சங்கம் சார்ந்தனம்-நல்லகூட்டத்தைச் சேர்ந்தோம். தண்டதரன்-இயமன். களங்கர்-குற்றத்தையுடையவர். 11. அரிக்கங்கணம்கட்டு-பாம்பாகிய காப்பைக் கட்டிய. அத்தர்-தந்தை. இக்கு-கரும்பு. அங்கணம்-சேறு. காங்கேயர்முருகர். சாகரத்து அரி-பாற்கடலில் எழுந்தருளிய திருமால். எழில் காசு அணி-அழகிய மணிகளால் அழகுசெய்யப்பட்ட. சேகரத்துஅரி-முடியை உடைய இந்திரன். அணங்கு-வருத்தம். கைச்சத்தி தாங்கினர்-கையில் வேற்படையை ஏந்தினார்.
|
|
|
|