முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
3. திருச்செந்தில் நிரோட்டக யமகவந்தாதி
தரணி யனைய நிறத்தண்ண லாரிரந் தன்றளந்த
தரணி யனைய னிறைஞ்சயி லார்நற் றனிச்சிலையாந்
தரணி யனைய னகனணை யந்தரி தந்திடுகந்
தரணி யனையனெஞ் சேயலர்த் தாள்கட ரித்திறைஞ்சே.
(16)
தரிக்கனந் தங்கலை நீள்சடைக் கைக்கனற் சங்கரனந்
தரித்தனந் தங்கலை நீதிகள் சாற்றரன் றந்தநற்கந்
தரிக்கனந் தங்கலை நீர்ச்செய்க்க ணாஞ்செந்தி லார்தளையா
ததிக்கனந் தங்கலை நீத்திழந் தேங்கரச் சங்கங்களே.
(17)
சங்கரி யக்க நிகர்த்தநின் றாதை ததையதென்னச்
சங்கரி யக்க ரிறைஞ்செழிற் செந்திற் சடானனகஞ்
சங்கரி யக்கதிர் தானிசை கின்ற சரணத்தினாற்
சங்கரி யக்கணத் தேயெற் செறியந் தகற்சினந்தே.
(18)
தகர னலங்க நிறைநிறத் தான்செந்திற் றந்தைசங்கேய்ந்
தகர னலங்க னளினா தனத்தினன் றாழளகந்
தகர னலங்க டரநின்ற சத்தியன் றாளெனினந்
தகர னலங்கனன் றாலெனச் சீறிட தக்கரன்றே.
(19)
தக்க னகத்தி னடறணித் தானயன் றன்கதிசந்
தக்க னகத்தி கிரிக்கர னாக்கங்க டந்தளிக்கத்
தக்க னகத்தி யளையாளி யென்னெஞ்ச தாஞ்சலசந்
தக்க னகத்தி னகரன்றன் செந்திலைச் சந்திக்கினே.
(20)

16. தரணி அனைய-கதிரவனைப் போன்ற. தரணியன்-திருமால். அயன்-நான்முகன். ஐஅநகன்-அழகனையுடைய மலரகிதர். அணி அல்-அழகிய அரண். 17. தரிக்க-அணிய. நந்து-வளர்தலையடைந்த. அம்கலை-அழகிய திங்கட்கலை. கைக்கனல் சங்கரன்-கையிலே தீயை உடைய சிவபிரான். அக்கரி-உமாதேவி. அனந்தம்-முடிவில்லாத. இக்கு-கரும்பு. தளை ஆதரிக்க-மாலையை விரும்ப. கலைநீத்து-ஆடையைப் போக்கி. கரச்சங்கங்கள்-கைவளையல்கள். 18. சங்கரி அக்கம்-உமாதேவியின் கண். சங்கு அரி-சங்கையுடைய திருமால். சரணத்தினால் சங்கரி-அடிகளினால் கொன்றருள். எற்செறி-என்னிடத்தே வந்து சேருகின்ற. 19. தகரன்-ஆட்டு ஊர்தியை உடையவன். நிறத்தான்-அழகையுடையவன். நளினாதனத்தினன்-தாமரையை இருக்கையாகவுடைய நான்முகன். அளகம்-கூந்தல். தகரநலம்-மயிர்ச் சாந்தாலாகிய இன்பம். சத்தியன்-கிரியாசத்தியாகிய தெய்வானையம்மையை உடையவன். அனலம்-வடவைத் தீ. 20. அகத்தின்அடல்-ஆணவத்தினது வலிமை. சந்தக் கனகத் திகிரிக்கரன்-அழகிய பொன் மயமான உருளைப்படையை ஏந்தியகையை உடைய திருமால். தந்து அளிக்கத் தக்கள்-கொடுத்துக் காப்பாற்றக் கூடியவர். நகு-விளங்கு கின்ற. தினகரன்-கதிரவன்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்