3. திருச்செந்தில் நிரோட்டக யமகவந்தாதி |
|
|
கந்தரங் கானந்த னிற்சென் றடங்கிலென் காசிக்கநே கந்தரங் கானந்த நண்ணிலென் கன்னியர் கட்டளக கந்தரங் கானந்த நின்றா டெழிற்செந்திற் கண்டிறைஞ்சிக் கந்தரங் கானந்த நல்கச் சனனங் கடந்திலரே.
|
(26) |
|
|
கடனந்தி னாகத் தகளாடை யாயெனைக் காக்கனிற்கே கடனந்தி நாணிறத் தாயென நாரணன் கண்டிறைஞ்செங் கடனந்தி நாதன் றனயனற் செந்திலிற் காரிகையே கடனந்தி னாயகங் காதலர் தேரிற் கலிக்கின்றதே.
|
(27) |
|
|
கணக்காக நாய்கடின் காய நிலையெனக் கண்ணியென்ன கணக்காக நானலைந் தெய்த்தே னெழிற்செந்திற்கந் தநெற்றிக் கணக்காக னார்தந்த நின்றனை யேயினிக் காதலினாற் கணக்காக னாநிகர்த் தேயழி யங்கத்தின் காதலற்றே.
|
(28) |
|
|
காதலை யானின் றனக்காக் கினனினிக் காயந்தந்தே காதலை யானின் றனக்கா ரணனடிக் கஞ்சங்கணீங் காதலை யானின் றகங்கரைந் தேத்தரன் கண்ணியராக் காதலை யானின்ற சங்கரன் சேய்செந்திற் காங்கெயனே.
|
(29) |
|
|
|
26. கந்தரம்-முழை. கால்நந்த-கால்வருந்த. கந்தரம்-முகில்-அளகம்-கூந்தல்.சனனம் கடந்திலர்-பிறப்பைப் போக்காதவர்கள். 27. கடம்நந்து இல்-மதங்கெடுதலில்லாத. நாகம்-யானை. அதள்-தோல். அந்தி நாள்- செக்கர் வானம். காரிகை-பெண். கடல் நந்தின் நாயகன்-கடலில் தோன்றிய சங்குகளுடைய தலைமையாகிய வலம்புரி. கலிக்கின்றது-ஒலிக்கின்றது. 28. கணக்காகம்-கூட்டமான காகங்கள். கண்ணி-எண்ணி. எய்த்தேன்-இளைத்தேன். அக்கு ஆகனார்-எலும்பு மாலையை அணிந்த உடலையுடையவர். 29. காயம் தந்து காதல்-உடலைக் கொடுத்துக் கொல்லாதீர். ஐயான்-சூக்குமரூபி. கண்ணி அரா-பாம்பாகிய மாலை.
|
|
|
|