| 4. பழமலையந்தாதி |
|
| |
கேட்டுப் புவனங் கொளவுமெண் ணோமெய்க் கிராதனின்முன் நாட்டுப் புவனம் பயின்மான் றசையுண்ட நாதனராப் பூட்டுப் புவனங் கொளுமெய்ப் பழமலைப் புண்ணியன்றாள் வேட்டுப் புவனம் பதினான்கு நல்கினும் வேண்டிலமே.
|
(19) |
| |
| |
வேண்ட வடுக்க நினைவதுன் றாண்மலர் வேட்கைமணி பூண்ட வடுக்க ணறுநுத லார்மயல் போக்குவது நீண்ட வடுக்க னயமா திளமுலை நேர்ந்துதவ மாண்ட வடுக்க ணிகர்தோட் பழமலை மன்னவனே.
|
(20) |
| |
| |
மன்னவ மாதவ னாடும் பழமலை வாணமணி அன்னவ மாதவ னன்மலைக் காற்கசைந் தம்மதிகண் டென்னவ மாதவ னல்லின்வந் தானென் றிரங்கிமதன் றின்னவ மாதவ நோமேயென் செல்வத் திருந்திழையே.
|
(21) |
| |
| |
திருந்திய வேதம் புகல்பரி சேயறஞ் செய்துடலம் வருந்திய வேதம் பொருளென வாழ்பழ மாமலையான் பொருந்திய வேதந் தருநஞ் சுணானெனிற் பூமலர்கா மருந்திய வேதம் புயமனை யாட்கணி மங்கலமே.
|
(22) |
| |
| |
மங்கல மாவி மலைசேர் பழமலை வாணமணிச் செங்கல மாவி மலர்க்கைக் குருகொடு செல்கவெமர்க் கிங்கல மாவி வளைநீ யணைந்த தினியுனெதிர் தங்கல மாவி தரிற்கொடு சேறுமெந் தண்மனைக்கே.
|
(23) |
| |
|
| |
19. மெய்க்கிராதன்-உண்மையன்பு வாய்ந்த திண்ணனார். துப்பு-சுவையாராயப்பட்ட. அராபூண்-பாம்பணி. துப்பு-பவழம். உப்புவனம்-உப்பிட்டநீர். 20. அடுக்க நினைவது-அடைய எண்ணுவது. நீண்ட அடுக்கல்-நெடிய இமயமலை. மாண்டவடுக்கள்-மாட்சிமைப்பட்ட தழும்புகள். நறுநுதலார்மயல்-நல்லநெற்றியை உடைய பெண்களுடையமயக்கம். 21. மாதவன்-திருமால். திருந்திழை-திருந்திய அணிகலன்களையுடைய பெண். மாதவன்-பெருமை தங்கிய தவத்தையுடைய அகத்தியர். அம்மதி-அழகிய திங்கள். நவம்-புதுமை. ஆதவன்-கதிரவன். மதன்-காமன். 22. புகல்பரிசே-கூறுகிற முறைப்படியே. ஏதம்தரும்-துன்பத்தைக் கொடுக்கும். காமர் உந்திய-அழகிய நாபியை உடைய திருமாலே. அம்புய மனையாட்கு-தாமரை மலரில் எழுந்தருளிய இல்லாளாகிய திருமகளுக்கு.23. மங்கலமா-சிறப்பாக. விமலை-விருத்தாம்பிகை. எமர்க்கு-எம்முடைய உறவினர்க்கு. அலமா-துன்பமுண்டாக. ஆவிமலர்-தடாகத்திற் பூத்த தாமரை மலரைப் போன்ற. கைகுருகு-கையிலணிந்த வளையல். தங்கலம்-நிற்க மாட்டோம். சேறும்-செல்லுதும்.
|
|
|
|