| 4. பழமலையந்தாதி |
|
| |
தண்டங் கமண்டலங் கொண்டு பழமலைச் சங்கரதாட் புண்டங்க மண்டலங் கண்டுசென் றாலுமெய்ப் போதமுறார் பண்டங் கமண்டலங் காரமின் னாக்கினன் பாட்டியலைக் கொண்டங் கமண்டலம் பாழாக் கியவுனைக் கூறலரே.
|
(24) |
| |
| |
கூற்றைக் கொடியங் கடப்பா னருளெனக் கூய்ப்பரவி ஏற்றைக் கொடியங் கரஞ்சேர் பழமலை யீசனணி நீற்றைக் கொடியங் குளமே வெறுத்தி நிறைபெருகும் ஊற்றைக் கொடியங் கினமோ டருந்து முடம்பினையே.
|
(25) |
| |
| |
உடற்கு வலையந் தகன்கைக் கயிறென் றுணர்ந்துளமே கடற்கு வலையம் புகழ்சீர் முதுகிரிக் கண்ணுதற்கு மடற்கு வலையம் புரைகளத் தாற்குநம் மன்றமர்ந்த நடற்கு வலையம் பணியா மவற்கன்பு நண்ணுகவே.
|
(26) |
| |
| |
நட்டுவ னாரை யறிகிலன் றண்ணுமை நந்திநின்று கொட்டுவ னாரை யிரைதேர் கயமுது குன்றுடையாய் தட்டுவ னாரை யகலாத நான்முகன் றாளமுயர் குட்டுவ னாரை வனைவான் பரவுநின் கூத்தினுக்கே.
|
(27) |
| |
| |
கூத்துகந் தம்பல மேவுறு மோர்முது குன்றனைநம் பாத்துகந் தம்பல மாரினு மெள்ளினும் பண்பனைத்தாள் சாத்துகந் தம்பல மாமறை யாற்புகழ் தாணுவைநாம் ஏத்துகந் தம்பல மார்பொது மாதரை யெள்ளினமே.
|
(28) |
| |
|
| |
24. தாள் புண் தங்க-கால்களிலே புண்படுமாறு. மண்டலம்-உலகிலுள்ள பலதலங்கள். மெய்ப்போதம்-உண்மை அறிவு. பண்டு-முன்னாளில். அங்கம்-எலும்பு. மின்-மின்னற் கொடி போன்ற பெண். ஆக்கினன்-திருஞானசம்பந்தர். அமண் தலம்-சமணர்கள் இருந்த இடம். 25. கொடியம்-கொடுமையை உடைய யாம். ஏற்றைக் கொடி-இடபக் கொடி. ஊற்றை-மலங்கள் நிறைந்த ஊற்றையுடைய. கொடி-காக்கை. இனம்-சுற்றம். ஏற்றுக்கொடி-ஐகாரச் சாரியை பெற்று நின்றது. 26. உடற்கு வலை-உயிராகிய பறவையைப் பிடித்தற்கு வலை. கடற்கு வலையம்-கடலாற் சூழப்பெற்ற உலகம். மடல்குவலையம்-மடலையுடைய குவளைமலர். புரை-ஒத்த. களம்-கழுத்து. மன்று-தில்லைமன்று. நடற்கு-கூத்தையுடையவர்க்கு. பணி ஆம் வலயம்-பாம்புகளாகிய கடகம். 27. நட்டுவனார்-ஆட்டிவைப்பர். தண்ணுமை-மத்தளம். கயம்-குளம். நாரை அகலாத-அன்பை நீங்காத. தட்டுவன்-அடிப்பான். குட்டுவன்-சேரன். ஆரைவனைவான்-ஆத்திமாலையை அணியுஞ் சோழன். பரவும்-போற்றும் 28. நம்பா-நம்முடைய பாடல். துகந்து-கசந்து. அம்பலம் ஆரினும்-அவையிலேறினாலும். தாள்சாத்துபண்பன்-திருவடியில் அணிந்து கொள்ளுகிற குணமுடையவர். தாணுவைஏத்துகம்-தாணுவாகிய சிவபெருமானைப் போற்றக் கடவோம்.
|
|
|
|