| 4. பழமலையந்தாதி |
|
| |
எள்ளா தவனை யெலும்பா பழமலை யென்றிருந்த கள்ளா தவனை மகவரிந் தாக்கெனக் கட்டுரைத்து விள்ளா தவனை மகிழ்பர மாவழல் வெண்மதியைத் தள்ளா தவனை முடிசூடெம் மாது தருக்குதற்கே.
|
(29) |
| |
| |
தருவி னிலையினி மன்னவற் கில்லையித் தண்புனத்தில் மருவி னிலையினி மைக்கூற் றெனக்கந்தி வானநிகர் உருவி னிலையி னியல்வேற் குகனை யுதவியகோன் கருவி னிலையி னிகந்தோன் பழமலைக் காரிகையே.
|
(30) |
| |
| |
காரிகை யார்க்கு வரும்பொது வோவல்ல காண்விசும்பிற் பூரிகை யார்க்கு முதுகுன்ற நாயகன் பொங்குமருள் வாரிகை யார்க்கு மருந்தனை யான்மலை மன்னனருள் நாரிகை யார்க்கு மெழுவுறழ் தோட்க ணறுநுதலே.
|
(31) |
| |
| |
நுதலரிக் கும்பரு வங்குறை என்றவ னோக்கடையா முதலரிக் கும்பரு மேத்துந் தமிழர் முருகுபெரு குதலரிக் கும்பரு கற்கருங் காமுது குன்றரிலார் சிதலரிக் கும்பரு மாமரம் போற்றுயர் தின்பவரே.
|
(32) |
| |
| |
தின்னக் கனியை விழைகூ னிளமந்தி தீங்கனியீ தென்னக் கனியை யிரவியிற் பாய்பொழி லீண்டுகுன்றை நன்னக் கனியை மதிவே ணியனிந்த நாம்பயந்த சின்னக் கனியை வலத்தில்வைத் தால்வருந் தீங்கென்னையே.
|
(33) |
| |
| |
தீங்கு திரைக்கட னேர்நரர் காடுயர் செய்மலத்திற் காங்கு திரைக்கட நாய்க்கிரை யென்றிந்த வாகமயல் நீங்கு திரைக்கட நன்முது குன்றர்க்கந் நிம்பனுக்கு வாங்கு திரைக்கட னீயவல் லார்க்கு வணங்குமினே.
|
(34) |
| |
|
| |
29. எள்ளாத-இகழாத. வனை-அழகு செய்யப்பட்ட. தவனை-தவமுடைய சிறுத்தொண்டனை. தருக்குதற்கு-களித்து வாழுதற்கு. ஆதவனை சூடு-கதிரவனை அணிந்துகொள். 30. தரு-மரம். அந்திவானம் நிகர்-செவ்வானத்தைப் போன்ற. ஐயின்இயல். அழகின் இயற்கையைப் படைத்த. இகந்தோன்-நீங்கியவன். 31. பூரிகை ஆர்க்கும்-பூரிகை முதலிய வாத்தியங்கள் முழங்கப்படுகிற. கையார்க்கு-வெறுக்காதவர்கட்கு. மருந்து-அமுதம். எழுஉறழ்-எழுத்தம்பத்தைப் போன்ற. மருந்தனையான் தோட்கள் என இயையும். 32. நுதல்-சொல்லப்பெறும். அரி-திருமால். முதலர்-முதற்கடவுள். கும்பர்-அகத்தியர். முருகு-தேன். அரிக்கும்-வண்டுக்கூட்டங்கட்கும். அரும்கா-உயர்ந்த சோலைகள். முதுகுன்றர் இலார்-பழமலை நாதருடைய அருளைப் பெறாதவர்கள். சிதல்-கறையான். பருமாமரம்-பருத்த மாமரம். 33. கன்னி ஐ இரவியில்-குறையாத அழகையுடைய கதிரவனிடத்தே. ஈண்டு-நெருங்கிய. நக்கன்-நிருவாணி. மதி இயை வேணியன்-திங்கள் பொருந்திய சடையை உடையவர். பயந்த-பெற்ற. சின்னக்கனி-சிறிய கன்னிகையாகிய பெண். 34. நரர்காள்-மனிதர்களே! மலத் திற்கு ஆம் குதிர்-மலத்திற்கான கூடு. ஐ கடம்-கோழைகள் நிரம்பிய குடம். ஆகம் மயல்-உடற்பற்று. ஐ கடம்-அழகிய காடுகள் சூழ்ந்த. நிம்பன்-வேப்பமாலையை அணிந்த பாண்டியன். வாம் குதிரைக்கடன்-தாவுகிற குதிரைகள் கொடுக்க வேண்டிய கடன்.
|
|
|
|