| 4. பழமலையந்தாதி |
|
| |
மாசி யதிகந் துறந்தார் மகிழ்குன்றை மாநகரோ காசி யதிகங் கொலோவென்பி ராயினக் காசியெனப் பேசி யதிகந் தகன்றிருந் தான்பரன் பேரடலை பூசி யதிகம் பரனீங்கி லானிப் புரியினையே.
|
(44) |
| |
| |
புரிசடை யாள பழமலை வாண பொருப்பெடுத்த கரிசடை யாள திகந் தீர்த் தருளக் கடுவயின்ற பரிசடை யாள முடையா யொழித்தனள் பட்டினையத் துரிசடை யாள தழுக்கா மெனாநின் றுகிலினுக்கே.
|
(45) |
| |
| |
துகிலங் குருகுந் துறந்தா ளுயிருந் துறக்கநின்றாள் அகிலங் குருகு மணிமுடி யாயெனு மத்தவளை முகிலங் குருகு மடியாய் பரந்த முதுகிரியாய் சகிலங் குருகுல மேத்திறை வாமைத் தடங்கண்ணியே.
|
(46) |
| |
| |
தடுக்க மலத்தி னொடுங்குதல் போலநின் றாளிலுறும் ஒடுக்க மலத்தி னிகழ்வால் வளையின மூர்ந்திடச்சேல் மடுக்க மலத்தி லுகள்வயல் சூழ்குன்றை மாநகரோய் அடுக்க மலத்தி புனையலங் கார வருளுகவே.
|
(47) |
| |
| |
அருவரை வில்லை யுமிழ்பணி நாகமு மத்திகளும் உருவரை வில்லை யெனப்பூண் பவரையவ் வும்பர்தொழும் பொருவரை வில்லை யுறுமுது குன்றரைப் போந்துமருள் ஒருவரை வில்லை வரிலொற்றி வையென வுற்றனமே.
|
(48) |
| |
| |
உற்கைக்கு மாறு படுமணி நாக மொளித்துலவி விற்கைக்கு மாறு சுமந்தவ சீர்முது வெற்பினின்பால் நிற்கைக்கு மாறு வழுவா நடக்கைக்கு நேரிழையார் சொற்கைக்கு மாறுந் தமியேனுக் கென்று துணைசெய்வையே.
|
(49) |
| |
|
| |
44. மாசி மகிழ்-மாசித் திங்கள் வரவை விரும்பும். பேர் அடலை பூசிய திகம்பரன்-பெரிய சுடலைப்பொடியைப் பூசிய திகம்பரராகிய சிவபெருமான். 45. புரி-கட்டிய. பொருப்பு-கோவர்த்தனமலை. அதிகம் தீர்த்தருள-பரத்துவ உயர்ச்சியைப் போக்கியருள. கடு அயின்ற-நஞ்சையுண்ட. பரிசு-தன்மை. துரிசு-குற்றம். துகில்-ஆடை. 46. அகிலம்-உலகில்உள்ளார். குருகு-கொக்கிறகு. வளைமுகில்-சங்கையேந்திய முகில்வண்ணனாகிய திருமால். சகிலம்-வரலாறு. குருகுலம்-குருவம்சம். 47. அலம்-கலப்பை. வளைஇனம்-சங்குக் கூட்டம். உகள்-பாய்கின்ற. அமல்-நெருங்கிய. அத்தி புனை-எலும்புமாலையை அணிந்த. 48. அருவர்-அரூபமானவர். வில்லை உமிழ்-ஒளியை வெளிப்படுத்துகின்ற. மணி நாகம்-மணியைஉடைய பாம்பு. வரைவு இல்லைஎன-நீக்கமில்லை யென்று சொல்லுமாறு. ஐவர் இல்-ஐம்புலங்களுடைய இருப்பிடம். 49. நாகம் ஒளித்து-பாம்பை மறைத்து. உற்கை-நெருப்புறு கொள்ளி. ஆறு-ஒழுக்கம். கைக்கும் ஆறும்-கசக்குந் தன்மையையும்.
|
|
|
|