முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
4. பழமலையந்தாதி
பூங்குமி ழும்படி முள்ளும் பொருந்திப் புளிஞர்பொருள்
வாங்குமி ழும்படி மோது மெனல்கொடு மால்விழுங்கி
ஆங்குமி ழும்படி வந்தவெம் பாலை யடைந்தவள்கால்
வேங்குமி ழும்படி னென்னாம் பழமலை வித்தகனே.
(55)
வித்துரு மத்தை நிகர்வா னுயிர்செய் வினையருத்துங்
கத்துரு மத்தை யிடுதயிர் போலக் கலக்குமதன்
சத்துரு மத்தை வனைமுது குன்றிறை தாள்கொடுவான்
நத்துரு மத்தை யிலவாக வெள்ளுவர் நற்றவரே.
(56)
நற்றவ ராக மறையவ ராகவிந் நானிலத்தில்
அற்றவ ராக மனமுடை யார்க்கன்றி யச்சமற
உற்றவ ராக மறியா தொளித்தநின் னொண்பதங்கள்
பற்றவ ராகம லாலயன் போற்றும் பழமலையே.
(57)
பழங்க விகட மகமந்திக் கீபொழிற் பண்டைமறை
முழங்க விகட வுளர்க்கீயுங் குன்றை முதல்வனைவேள்
அழங்க விகட விழிதிறந் தானை யடிபரவார்
கிழங்க விகட மறவரிற் றோன்றிக் கெடுவர்களே.
(58)
கெடுத்துப் பணியு முடையும்வெள் காமற் கிழத்திமுலை
வடுத்துப் பணியு முரம்வேட்டு நின்றனள் வல்லியதள்
உடுத்துப் பணியு மரைக்கசைத் தோய்தொண்ட ருள்ளமெல்லாங்
கொடுத்துப் பணியு மலர்த்தாட் டிருமுது குன்றத்தனே.
(59)

55. குமிழ்-குமிழஞ்செடி. புளிஞர்-வேடர்கள். இழும்படி-வழுக்கி விழுமாறு. மால்-திருமால். திருமாலும் இப்பாலை நிலத்தின் வெப்பத்தை நோக்கியே உமிழ்ந்தனர் என்பது கருத்து. 56. வித்துருமம்-பவளம். கத்துரு-தலைவர். மத்தைவனை-ஊமத்தம் பூவைச் சூடிய. வானத் துருமம்-விண்ணுலகத்திலுள்ள கற்பக மரச்சோலை. இல ஆக-நிலையற்றதாக. 57. நல்தவர்-நல்ல தவத்தையுடையவர். அராகம்-மூவித ஏடணைகள். பற்றவரா-கிட்டுதற்கரியனவாம். 58. கவிகள்-குரங்குகள். மக-மகவுக்கும். மந்தி-பெண் குரங்குகள். அவி-தேவருணவு. வேள் அழங்க-காமனழியுமாறு. விகடம் விழி-மாறுபட்ட கண். கடம்-காடு. மறவர் இல்-வேடர் குடி. 59. பணி-அணிகலன். கெடுத்து-போக்கி விட்டு. வெள்காமல்-நாணாமல். கிழத்தி-உமாதேவி. துப்புஉரம்-பவழம் போன்ற மார்பு. அதள்-புலித்தோல். பணியும் அசைத்தோய்-பாம்பையுங் கட்டியவரே.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்