முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
4. பழமலையந்தாதி
குன்றுக ளுங்களை யொவ்வா வெனுமுலை குன்றதிர்க்குஞ்
சென்றுக ளுங்களை யுண்வண்டு மோவில் செழுங்கொன்றைமான்
கன்றுக ளுங்களை நன்மதி வேணிக் கடவுடனை
யென்றுக ளுங்களை யெம்மானைக் குன்றை யிறைவனையே.
(60)
இறவாத வாநந்த வெள்ளத் தழுத்தி யெனையருளால்
துறவாத வாநந்த வாள்வதென் றோமெய்த் துறவர்தொழும்
அறவாத வாநந்த னஞ்சூழ் முதுகுன் றடைந்தவர்தம்
உறவாத வாநந்த கோபால னென்றற் குடையவனே.
(61)
உடைய மடங்க லுதைத்தபொற் பாத வொளிசெய்மழுப்
படைய மடங்கன் முகற்காய்ந்த வீர பழமலையாய்
கடைய மடங்கல் லொடுபக லுந்தொழக் கற்றலமெம்
விடைய மடங்கல் வருவதெஞ் ஞான்று விளம்பகவே.
(62)
விளங்க வலம்புரி மால்போற்று நன்முது வெற்பகஞ்சேர்ந்
துளங்க வலம்புரி யாய்மாய் பிறிதொ ருடம்படையாய்
துளங்க வலம்புரி மென்குழன் மாதர்க்குச் சூழ்ந்துநின்று
களங்க வலம்புரி யிவ்வெற்பை யேநிலை கைவருமே.
(63)
வருந்தா தவரை வளைத்திட் டவபவ வன்பிணிக்கு
மருந்தா தவரை மருவும் பழமலை வாணவுனைப்
பொருந்தா தவரை யுயிர்செகுத் துண்ணம் புலிமழுங்கத்
திருந்தா தவரை வரக்கூ வுறாததென் சேவல்களே.
(64)

60. அதிர்க்கும்-ஆரவாரிக்கும். ஓவுஇல்-நீக்க மில்லாத. உகளும்-துள்ளிப் பாயும். துகளும்-குற்றத்தையும். 61. இறவாத-கெடாத. அவாநந்த-அவாக் கெடுமாறு. அறவா-அறவடிவினனே! தவாநந்தனம்-அழிவில்லாத பூஞ்சோலை. உறவா-உறவாக விருப்பவரே. 62. மடங்கல்-சிங்கத்தைப் போன்ற நமன். உடைய-ஆற்றல் கெட. மடங்கல் முகன் காய்ந்த வீர-திருமாலாகிய நரசிங்கத்தைப் பிளந்த வீரமுடையவரே! கடையம்-கடையேமாகிய யாம். மடங்கு-மாறி மாறி வருகின்ற. விடையம் அடங்கல்-பொறியடங்கல். 63. வலம்புரி மால்-வலம்புரிச் சங்கையுடைய திருமால். முதுவெற்பகம்-பழமலையிடம். மாய்-இறந்தொழியும். பிறிது ஒரு உடம்பு-வேறோர் உடல். நிலை-வீடுபேற்று நிலை. துளங்க-ஒளிவிட. களங்க அலம் புரி-துன்பத்திற்கேதுவாகிய செயல்களையே செய்கின்ற. உள்-மனம். 64. வரை-மேருமலை. பவவன் பிணி-பிறவியாகிய வலிய நோய். மருந்தா-மருந்தானவரே! தவரை-தவஞ்செய்பவர்களை. உயிர் செகுத்து-உயிரைக் கொன்று. அம்புலி-திங்கள். ஆதவர்-கதிரவர்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்