| 4. பழமலையந்தாதி |
|
| |
சேவாலங் காட்டு பொழுதகஞ் சாயச் செலுத்திவரி மாவாலங் காட்டு முதுகிரி வாணவவ் வானமுய்ய வேவாலங் காட்டு மிடற்றாய்நின் சீர்த்தி விரித்துரையா நாவாலங் காட்டு விலங்காயி னேனிந்த நானிலத்தே.
|
(65) |
| |
| |
நிலங்கடந் தானை மகிழ்வானைத் தன்னடி நின்றொடுங்கும் புலங்கடந் தானை முதுகுன்ற வாணனைப் போற்றிலர்தந் நலங்கடந் தானை முழுது மிழந்தந் நகரினிற்போய் இலங்கடந் தானை துணிசீரை யாக்கொண் டிரப்பர்களே.
|
(66) |
| |
| |
இரப்பாரி லாரை யிலரெனின் வைவ ரிரந்திடிற்றாங் கரப்பாரி லாரை முகநோக்கு றார்மழுக் கைக்குன்றையாய் உரப்பாரி லாரை யுறவாகக் கொள்வர்தம் முள்ளனபோய் நிரப்பாரி லாரை யவிப்பார்தம் மக்களை நீத்திருந்தே.
|
(67) |
| |
| |
இருப்பு வலியை யகன்றுபொன் வல்லியை யெண்ணுதலாம் விருப்பு வலியை முலையா ரணங்கினர் விண்ணுறுதல் பொருப்பு வலியை யிடத்தில்வைத் தாய்மலர்ப் பூங்கணைசேர் கருப்பு வலியை யொழித்தாய் பழமலைக் கண்ணுதலே.
|
(68) |
| |
| |
கண்டந் தரிக்கும் விடத்தார் பழமலைக் கண்ணுதலார் பண்டந் தரிக்கு மருங்களித் தார்தம் பழவடியார் எண்டந் தரிக்கு மரிதாகும் பாத ரிருங்கருமா வெண்டந் தரிக்கு மதற்காய்ந் தவரெனு மெல்லியலே.
|
(69) |
| |
|
| |
65. சே-எருது. ஆலம் காட்டும் பொழுது-தண்ணீர் குடிப்பிக்கும் வேளையில். அகம்சாய-மனஞ்சோர. வரிமா-புலி. வானம்-தேவர்கள். ஆலம்-நஞ்சு. 66. நிலங் கடந்தான்-திருமால். போற்றிலர்-வணங்காதவர்கள். நலங்கள்-செல்வங்கள் தானை-படை. 67. இலாரை-இல்லறமுடையவர்களை. நிரப்புஆரில்-வறுமை மேலும் மிகுதிப்பட்டால். ஆரை அவிப்பார்-ஆரைக் கீரையை அவித்துத் தின்பார்கள். உரம்பாரில்-வலிய இவ்வுலகத்தில். ஆரை-எவரை. 68. பொருப்புவலி-மலைமகள். கருப்பு வலியை-கரும்பு வில்லின் வல்லமையை. வல்இயை-சூதாடுகருவியை ஒத்த. இருப்புவலி-இருப்பு விலங்கு. பொன்வல்லி-பொன்விலங்கு. 69. கண்டம்-கழுத்து. சுந்தரி-உமாதேவி. மருங்கு-பக்கம். எண்தந்து-கருத்தை முடித்து. அரிக்கும்-திருமாலுக்கும். இரு-பெரிய. கருமா-பன்றி. இக்குமதன்-கரும்புவில்லைடைய காமன்.
|
|
|
|