முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
4. பழமலையந்தாதி
மெல்ல வணங்கு நினைவா லெதிர்ந்திட வேனெடுங்கண்
நல்ல வணங்கு வளையுடை யோடு நடந்திலைநீ
கொல்ல வணங்கு மதிசுமந் தேநின்ற கொள்கையென்னோ
வெல்ல வணங்கு மலையாய் முதுகிரி வேதியனே.
(70)
வேதிய வாவி தனக்காவி யாகிய வித்தகப்பெண்
பாதிய வாவி மலர்த்தேன் பெருகும் பழமலைவாழ்
சோதிய வாவி வருவிடைப் பாகநின் றொண்டருறு
நீதிய வாவி யவரையென் றோசென்று நேர்குவனே.
(71)
நேரு மடியர் தமக்குற வாயவர் நேசமறச்
சோரு மடியர் தமையணு காதவர் தும்பியினாற்
சாரு மடியர் மணிநிற வண்ணன் றரையிடந்து
தேரு மடியர் முதுகுன்ற வாணுதற் றீக்கண்ணரே.
(72)
கண்டீர வந்தனை நேர்ந்தாங் கருகக் களிற்றினைமுன்
கொண்டீர வந்தனை வானேர் செயுமுது குன்றனெடு
வண்டீர வந்தனை நேர்வாளைக் கோலம் மதனனெய்யும்
புண்டீர வந்தனை சேர்தியென் றோதுமின் போமின்களே.
(73)
போதுமின் மாலை வகைவகை யாகவம் பொற்றொடியீர்
ஓதுமின் மாலை தரின்வம்மி னில்லையென் றோட்டினரேல்
மாதுமின் மாலை வருமுனஞ் சாமென்று வண்கைமலர்
மோதுமின் மாலை மகிழ்குன்றை வாணர்தம் முன்னடைந்தே.
(74)

70. வேல்நெடுங்கண்-வேலைப் போன்ற நீண்ட கண்களையுடைய பெண். வளை-வளையல். உடை-ஆடை. 71. பெண்பாதிய-உமாதேவியைப் பாதியுடலில் உடையவனே! வாவி-தடாகம். சோதிய-ஒளிவடிவரே. வாவிவரு-தாவிச்செல்லும். நீதி-ஒழுக்கங்கள். 72. நேரும்-அன்போடடையும். தும்பி-யானை. மடியர்-ஆடையை உடையவர். மணிநிற வண்ணன்-திருமால். இடந்து-தோண்டி. 73. கண்டீரவம்-சிங்கம். ஈர-தோலை உரிக்க. வந்தனை-வணக்கம். கோல்புண்-கணையினால் உண்டாகிய புண். அவம்தனை நேர்வாளை-சுகத்தையிழந்து கிடக்கும் எங்களுடைய தலைவியை. 74. போதுமின்-போங்கள். வம்மின்-வாருங்கள். ஒட்டினரேல்-துரத்துவாரானால். கைமலர் மோதுமின்-கைகளால் அறைந்து கொள்ளுங்கள். மாலை மகிழ்-திருமாலை மகிழ்ந்து அடிமை கொண்ட.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்