| 4. பழமலையந்தாதி |
|
| |
முன்னஞ் சிலம்பு சிலையாக் கியநன் முதுகிரியாய் பொன்னஞ் சிலம்பு சிலம்புத லோடையிற் பூஞ்சிறகர் அன்னஞ் சிலம்பு நடையிள மானை யனங்கனெய்து தன்னஞ் சிலம்பு குவளையல் லாத தணந்தனனே.
|
(75) |
| |
| |
தணந்தவ ளக்கரி மேனிய ளாங்கொல்வெண் சங்கினங்கண் மணந்தவ ளக்கரி னின்றழு மோவல வாவுயிர்கள் உணர்ந்தவ ளக்கரி தாமுது குன்றர னோங்கமர கணந்தவ ளக்கரி யானேத் திறையன்றிக் காப்பிலையே.
|
(76) |
| |
| |
காப்புக் கரியுந் திருமக ணாயகன் காப்பவற்றின் பூப்புக் கரியுந் தலையுடை யானும் பொருந்தவைத்தான் மாப்புக் கரியுங் குயிலும் பயில்பொழில் வண்டில்லையான் மூப்புக் கரியும் புலியுங்கொன் றீர்ந்த முதுகுன்றனே.
|
(77) |
| |
| |
முதுமறை யந்த முறுபொரு ளேநன் முழுப்பணிக்கு விதுமறை யந்த முடியாய் புராணம் விளங்கிரண்டொன் பதுமறை யந்த முதுகுன்ற வாணநின் பாதம்வணங் குதுமறை யந்த கனைமார்பி லெம்மைக் குறுகிடினே.
|
(78) |
| |
| |
குறுகு முனிவனை யன்றாண்ட விம்முது குன்றனுக்கு மறுகு முனிவனை செய்தாலுய் வாரெவர் வந்தருளென் றறுகு முனிவனை போதுமி டார்நம னார்முனிவு முறுகு முனிவனை யெய்தா ரறிவறு மூடரினே.
|
(79) |
| |
|
| |
75. சிலை-வில். சிலம்பு-மேருமலை. பொன்னம் சிலம்பு-பொற்சிலம்பு. அன்னம் சிலம்புதல் சிலம்பும்-அன்னங்கள் ஒலித்தலைப் போல ஒலிக்குமாறு, அனங்கன்-காமன். தணந்தனன்-தனது கணைகளை யெல்லாம் இழந்தான். 76. தணந்தவள்-பிரிந்த தலைவியானவள். மணந்த-கலந்த. அளக்கர்-கடல். வலவா-தேர்ப்பாகனே. நந்த-மிகவும் அளவிடுதற்கு. ஓங்கு அமரகணம்-உயர்ந்த தேவர் கூட்டம். தவளக்கரியான்-வெள்ளை யானையை உடைய இந்திரன். 77. காப்புக்கு-காத்தல் தொழிலுக்கு. அரியும் திருமாலும். பூப்புக்கு-படைத்தல் தொழிலுக்கு. அரியும் தலையுடையான்-வைரவக் கடவுளால் கிள்ளப்பட்ட தலையை உடைய நான்முகன். மா-மாமரங்கள். தில்லையான்-சிதம்பரத்தையுடையவன். மூப்பு-முதிர்ந்த. 78. முழுப்பணிக்கு-முழுப்பாம்புக்கு. விதுமறை-முடியிலுள்ள பிறை ஒளிக்கின்ற. இரண்டொன்பதும் அறை-பதினெட்டுப் புராணங்களும் போற்றுகின்ற. அறை-மோதுவாயாக. 79. குறுகு முனிவன்-அகத்தியர். மறுகும் முனிவு-மயங்குதற்கேதுவாகிய சினம். அனை-அன்னை. உனி-உன்னி. வனைபோதும்-மாலையாகக் கட்டப்பட்ட மலரும். முனிவு முறுகுமுன்-சினம் முதிர்வதற்கு முன்பாக. உனி-இடைக்குறை.
|
|
|
|