| 4. பழமலையந்தாதி |
|
| |
மூடா நமாதி மிரையடைந் தாயலென் முன்னணுகல் மீடா நமாதி பெருமா னுதைக்கினு மெய்ப்புகழைப் பாடா நமாதி யெழுத்தைந்து மோதிப் பழமலைவாழ் வீடா நமாதி யடியா ரடியருண் மேவினமே.
|
(80) |
| |
| |
மேவத் தகரை யிவர்மக வீன்றதொல் வெற்பரச சேவத் தகரை வொடுபூசித் துன்னைவிண் செல்வமுறும் பூவத் தகரை நகுவே மெமக்குநின் பொங்கருளால் ஓவத் தகரை வகைப்பாச முந்தம் முரங்குலைந்தே.
|
(81) |
| |
| |
குலையா நிலமும் விசும்புந் தொழுமுது குன்றமதிக் கலையா நிலமும் மடியழல் காயவக் காய்கனலின் மலையா நிலமு முடன்கூட வேமெனை வாங்குகழைச் சிலையா னிலமு மெமதில்ல மாய்நின்று சீறுவனே.
|
(82) |
| |
| |
சீறிரை யாக மதியுணும் பாம்பணி செல்வமறை மாறிரை யாக மலிமுது குன்ற மருவுதற்குச் சேறிரை யாகயி லாசவி லாசசு தேவவென்மின் தோறிரை யாக நிலையென்று வாழன்மின் றொண்டர்களே,
|
(83) |
| |
| |
தொண்டரைக் கூடல் விழையார் பொழின்மலர்த் தூளுதிர்தல் விண்டரைக் கூட லறவுறல் போலுந்தொல் வெற்புறுமைக் கண்டரைக் கூட லுடையாரைப் போற்றிலர் கற்றறியா மிண்டரைக் கூடல் வழியே நடத்துபு வீழ்த்துவரே.
|
(84) |
| |
|
| |
80. மூடா நமா-மூடனாகிய நமனே! திமிர்-ஆணவம். ஆயல்-ஆராயாதே. மீள்-மீண்டு விடுவாயாக! தாநம் ஆதி-இடமாவாய். நமாதி எழுத்து ஐந்து-திருவைந்தெழுத்து. நம் ஆதி-நமதுமுதற் பொருளாகிய இறைவன். 81. தகரை இவர்-ஆட்டுக்கடாவை ஊருகின்ற. மேவ-விருப்பமாக. சேஅத்த-காளையூர்தியை உடைய தலைவரே! கரைவொடு-நெகிழ்ந்துருகும் அன்போடு. பூவத்தகரை-உலக வியாபாரிகளை. நகுவேம்-இகழ்ந்து நகைப்பேம். ஓவதகர்-ஒழியும் படியாகச் சேதிப்பீராக. உரம்-வலிமை. 82. குலையா-குன்றுதலில்லாத. நில அழல் மும்மடிகாய-நிலவுத்தீ மூன்றுபங்கு அதிகமாகச் சுட. மலையாநிலம்-தென்றற் காற்று, கழைச்சிலை-கரும்புவில். இலம்-இல்லம்; வீடு. 83. மதி உணும்-திங்களைத் தின்னும். செல்வம் மறை-சிறப்பாகிய மறைகள். மால் திரை ஆக-பெரியஅலை கடல்போல. கயிலாச விலாச-கயிலாசமலையை உடையவரே. சுதேவ-நல்லதேவரே. திரை-திரைந்தழியும். ஆகம்-உடல். 84. கூடலை விழையார்-கூடியிருத்தலை விரும்பாதவர்கள். மலர் தூள் உதிர்த்தல்-மலர் மகரந்தப்பொடிகளை உதிர்த்தல். விண்-விண்ணுலகம். தரை-மண்ணுலகம். மைக்கண்டர்-கரியகழுத்தையுடையவர். கூடல் உடையார்-மதுரையை உடையவர். மிண்டர்-கீழ்மக்கள். ஐகூடு-கோழைக் கூடாகிய உடல். நடத்துபு-நடத்தி.
|
|
|
|