| 4. பழமலையந்தாதி |
|
| |
வீழி வலஞ்சுழி தில்லை சிராப்பள்ளி வேதவனங் காழி வலஞ்சுழி யன்மேவு குன்றைக் கடவுள்விடின் ஆழி வலஞ்சுழி வெள்வளை யானணை யன்னகல்விப் பாழி வலஞ்சுழி யுந்தியுள் வாங்குவர் பாவையரே.
|
(85) |
| |
| |
பாவல ருக்கு மலிபொரு ளீந்துகொள் பாட்டினர்க்கு மேவல ருக்கு மழுவார்க்கு நன்முது வெற்பினுக்குக் காவல ருக்கு மயலாகி நின்று கலங்குகின்றாய் ஆவல ருக்கு விளைநில மாயினை யாயிழையே.
|
(86) |
| |
| |
ஆயக் கலையக லுஞ்சீர் முதுகுன் றரசமுனஞ் சாயக் கலைய னிமிர்த்தசெம் மேனிய தப்பலில்லா னேயக் கலைய புழுக்கூ டெனுமுட னேயமெல்லாம் மாயக் கலைய மலமாயை கன்மங்கள் வந்தருளே.
|
(87) |
| |
| |
வந்திக்க நாவி னினையே வழுத்த மலர்விழியால் முந்திக்க னாவி தொலைத்தோய் நினது முதுவெற்பையே சிந்திக்க நாவி மதநாறு மாதரைச் சேருமின்பம் நந்திக்க னாவி னொழிவாமென் றுன்னுற நல்குதியே.
|
(88) |
| |
| |
நல்குர வேநல் லுரைதான் முதுகுன்றர் நாட்டுனக்குச் சொல்குர வேநல் குரவுறு வேல தொடைகள்பல மல்குர வேன லிதண்விட் டகம்புக்க மானையிந்த ஒல்குர வேனல் லிடைக்கொடு போகலென் றோதிலையே
|
(89) |
| |
|
| |
85. சுழிஉந்தி-கூடற் சுழிகளை எழுதி. ஆழி-உருளைப்படை. வலம்சுழி வெள்வளை-வெள்ளிய வலம்புரிச்சங்கு. அணை அன்ன-படுக்கையாகிய ஆதிசேடனைப் போன்ற. பாழிவலம்-பெரியவன்மை. 86. பாவலர்-சுந்தரர் முதலியோர். மேவலர் உக்கும்-பகைவர்களை அழித்தொழிக்கும். மழுவார்-மழுப்படையை உடையவர். காவலர்-தலைவர். ஆ-வியப்பு. அலருக்கு-பழிச்சொல்லுக்கு. 87. கலை அகலும்-கலையறிவுகட்கு அப்பாற்பட்டு நிற்கும். கலையன்-குங்குலியக் கலைய நாயனார். தப்பல் இல்லான்-சாக்கிய நாயனார் கல்ஐய-கற்களையுடைய தலைவரே. 88. இக்கன் ஆவி-காமனுடையஉயிர். நாவி-கத்தூரி. நந்தி-அழிந்து. உன்னுற-நினைக்க. 89. குரவு-குராமரம். நல்குரவு உறு-நல்ல குராமாலையை அணிந்த. ஏனல்-தினை. பலதொடைகள்-பலகட்டுக்கள். இதண்-பரண். அகம்புக்க மானை-இல்லடைந்த தலைவியை. அல்லிடை-இராப்போதில். ஒல்குரவு-இழிதொழில்.
|
|
|
|