முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
4. பழமலையந்தாதி
தேவியு மானும் விளையா டிடமுடைச் செங்கணுதல்
ஆவியு மானும் வருஞ்சீர் முதுகுன் றணிவிழவைக்
காவியு மானும் விழியாய்கண் டெய்தெனக் கண்மறுகின்
ஏவியு மானும் மகட்கிடர் நீர்செய்தி ரேழையரே.
(96)
ஏடலை யாறு கிழித்தெதி ரேறவிண் ணேறுபுகழ்க்
கூடலை யாறு புலியூர் மகிழ்முது குன்றர்பெற்ற
வேடலை யாறு முயிர்த்தெடுத் தேந்துபு மென்கைகொடுத்
தூடலையாறு வருகவென் பார்நல் லுமைதனையே.
(97)
உமையிடப் பாக னலங்கூர் முதுகுன் றுடையனராச்
சுமையிடப் பாக வரிதே டடியுறத் தூமலர்கள்
தமையிடப் பாக மருவுவ ரேலவர் தங்களைப்பா
ரமையிடப் பாக னணுகா னுதைநினைந் தஞ்சுவனே.
(98)
அஞ்சு வணத்தை வரன்முறை யோத வரக்கெறிந்த
பஞ்சு வணத்தை மருவுமென் றாளுமை பாகமொடு
செஞ்சு வணத்தை யனையநின் கோலமென் சிந்தையுற
விஞ்சு வணத்தை மகிழ்குன்றை வாண விரும்புவனே.
(99)
விருத்தா சலசங் கராமலை மாது விழிகளிக்கும்
நிருத்தா சலசந் திரன்போ லுடம்பிடை நின்றவர்தங்
கருத்தா சலசம் பவமிலர்க் காண்டறங் காட்டியசொற்
றிருத்தா சலசந் தமியேன் றலைக்குன் றிருவடியே.
(100)

96. நுதல் செங்கண் ஆவி-நெற்றியிற் சிறந்த கண்ணையுடைய சிவபெருமானுடைய உயிரைப் போன்ற இறைவி. மறுகு-தெரு. 97. அலை ஆறு-அலை பொருந்திய வைகை. விண்ஏறு-விண்ணுலகம் வரை ஏறிய. உயிர்த்து-உச்சி மோந்து. ஊடலைஆறு-ஊடலைத்தணி. 98. அராச்சுமை இடப்பு ஆக-ஆதிசேடனுக்குச் சுமையாகிய இந்நிலவுலகமானது பிளவுபட. பாகம் மருவுவரேல்-பரிபக்குவத்தை அடைவார்களானால். மையிடப்பாகன்-எருமைக் கடாவைச் செலுத்தும் நமன். உதை-முன்பு கிடைத்த காலுதை. 99. அஞ்சுவணத்தை-திருவைந்தெழுத்தை. அரக்கு எறிந்த-செந்நிறத்தை வீசகிற. 100. சங்கரா-சுகஞ்செய்பவரே! சல சந்திரன் போல் உடம்பிடை நின்றவர்-மெய்யறி வாளர்கள். சலசம்பவம் இலர்க்கு-பொய்யாகிய பிறவியை ஒழித்த சனகாதி முனிவர்களுக்கு.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்