பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


114


    ஆருயிரும், உடல் உலகும் ஒன்றோடொன்று தாமாகப் பொருந்தா - எல்லாவறிவும் உடைய இறைவன் முறையுறப் புணர்த்தப் புணர்வன என்னும் உண்மை வருமாறு :

"தனக்கென அறிவி லாதான் தானிவை அறிந்து சாரான்
 தனக்கறி விலாத வாயில் தான்அறி யாது சாரா
 தனக்கென அறிவி லாதான் தத்துவ வன்ன ரூபன்
 தனக்கென அறிவா னால்இச் சகலமும் நுகருந் தானே."
- சிவப்பிரகாசம் - 64.
(3)
பட்டப் பகற்பொழுதை இருளென்ற மருளர்தம்
    பட்சமோ எனதுபட்சம்
  பார்த்தவிட மெங்கணுங் கோத்தநிலை குலையாது
    பரமவெளி யாகவொருசொல்
திட்டமுடன் மௌனியா யருள்செய் திருக்கவுஞ்
    சேராமல் ஆராகநான்
  சிறுவீடு கட்டியதின் அடுசோற்றை யுண்டுண்டு
    தேக்குசிறி யார்கள்போல
நட்டனைய தாக்கற்ற கல்வியும் விவேகமும்
    நன்னிலய மாகவுன்னி
  நானென்று நீயென் றிரண்டில்லை யென்னவே
    நடுவே முளைத்தமனதைக்
கட்டஅறி யாமலே வாடினே னெப்போது
    கருணைக் குரித்தாவனோ
  கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு
    கருணா கரக்கடவுளே.
     (பொ - ள்) "பட்டப் . . . ஆராகநான்" - நடுப்பகற்பொழுதை (நாட்டமின்மையால்) இருளென்று சொல்லி மயங்கும் மருளர்தம் பகுதியோ எளியேன் பகுதி; எங்கெங்குப் பார்த்தாலும், எளியேனை (தன்னகத்தடக்குதலாகிய) விழுங்கிய நிலையினின்றும் சிறிதும் மாறாத மேலான அருட்பெருவெளியே தோன்றுமாறு ஒப்பில்லாத சிவ என்னும் ஒரு சொல் செவ்வையாய் உரையாட ஒண்குருவாய் நின்று நீ அருள்செய்திருக்கவும், (அடியேன்) அம்மொழிவழி நின்றொழுகாமல் எளியேன் என்னை வேறுபட்ட ஒருவனாகவெண்ணி; (நாட்டம்-கண.)

     "சிறுவீடு . . . உன்னி" - மணலாற் சிறுவீடு கட்டி அவ்வீட்டில் (மனமகிழ்வொடு) சமைத்த மணற் சோற்றினை (ஒருவரோடொருவர் உவப்புடன் நல்கி) உண்டு உண்டு களித்துத் தெவிட்டித் திரிந்து