சந்தை - அங்காடி. திரம் - உறுதி. தாமத சாத்துவிகம், இராசதம், என்ற முக்குணங்களுள் தாமதம் ஒன்று.
முக்குணங்களையும் முறையே அறிவுப்பண்பு, ஆட்சிப்பண்பு, அழுந்தற்பண்பு எனக் கூறுப.
அறுசமயங்கள்தோறும் பயனளிக்கும் ஆண்டவன் ஒருவனே என்னும் உண்மை வருமாறு :
| "தக்கனது பெருவேள்வி தகர்த்தா னாகித் |
| தாமரையான் நான்முகனுந் தானே யாகி |
| மிக்கதொரு தீவளிநீ ராகா சமாய் |
| மேலுலகுக் கப்பாலா யிப்பா லானை |
| அக்கினொடு முத்தினையு மணிந்து தொண்டர்க் |
| கங்கங்கே யறுசமய மாகிநின்ற |
| திக்கினையென் திருமுதுகுன் றுடையான் தன்னைத் |
| தீவினையேன் அறியாதே திகைத்த வாறே." - |
| 6. 68 - 5 |
"சீறுபுலிபோற்சீறி . . . சிவக்கவறிவார்" என்றதற்குச் சிவயோகியர் போன்று உயிர்ப்பை நிறுத்துங் குறியாகக் கண்ணைச் சிவந்து காட்டி யென்றலுமொன்று.
(3)
| காயிலை யுதிர்ந்தகனி சருகுபுனல் மண்டிய |
| கடும்பசி தனக்கடைத்துங் |
| கார்வரையின் முழையிற் கருங்கல்போ லசையாது |
| கண்மூடி நெடிதிருந்தும் |
| தீயினிடை வைகியுங் தோயமதில் மூழ்கியுந் |
| தேகங்கள் என்பெலும்பாய்த் |
| தெரியநின் றுஞ்சென்னி மயிர்கள்கூ டாக்குருவி |
| தெற்றவெயி லூடிருந்தும் |
| வாயுவை யடக்கியு மனதினை யடக்கியு |
| மௌனத்தி லேயிருந்தும் |
| மதிமண்ட லத்திலே கனல்செல்ல அமுதுண்டு |
| வனமூடி ருந்தும் அறிஞர் |
| ஆயுமறை முடிவான அருள்நாடி னாரடிமை |
| அகிலத்தை நாடல்முறையோ |
| அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி |
| ஆனந்த மானபரமே. |