பாராதி ககனப் பரப்புமுண் டோவென்று | படர்வெளிய தாகிஎழுநாப் | பரிதிமதி காணாச் சுயஞ்சோதி யாய்அண்ட | பகிரண்ட உயிரெவைக்கும் | நேராக அறிவாய் அகண்டமாய் ஏகமாய் | நித்தமாய் நிர்த்தொந்தமாய் | நிர்க்குண விலாசமாய் வாக்குமனம் அணுகாத | நிர்மலா னந்தமயமாய்ப் | பேராது நிற்றிநீ சும்மா இருந்துதான் | பேரின்ப மெய்திடாமல் | பேய்மனதை யண்டியே தாயிலாப் பிள்ளைபோல் | பித்தாக வோமனதைநான் | சாராத படியறிவின் நிருவிகற் பாங்கமாஞ் | சாசுவத நிட்டைஅருளாய் | சர்வபரி பூரண அகண்டதத் துவமான | சச்சிதா னந்தசிவமே. |