பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

449
     (வி - ம்.) பாழெனினும் சூனியமெனினும் ஒன்றே. பொய் - நிலையில்லாதது. மெய் - நிலையுள்ளது. பொய்யுறவாம் உடம்பின் தன்மை வருமாறு :

"குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே
    உடம்போ டுயிரிடை நட்பு."
- திருக்குறள், 338
"புக்கி லமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
 துச்சிலிருந்த வுயிர்க்கு"
- திருக்குறள், 340.
"உற்றா ராருளரோ - வுயிர்
    கொண்டு போம்பொழுது
 குற்றா லத்துறை கூத்தனல் லானமக்
    குற்றா ராருளரோ."
- 4. 9 - 11.
(1)
பாராதி பூதமெல்லாம் பார்க்குங்கால் அப்பரத்தின்
சீராக நிற்குந் திறங்கண்டாய் - நேராக
நிற்குந் திருவருளில் நெஞ்சேயாம் நிற்பதல்லால்
கற்குநெறி யாதினிமேற் காண்.
     (பொ - ள்.) நெஞ்சே! நேரே காண்டற்குரிய நிலமுதலாகச் சொல்லப்படும் பூதங்களைந்தும் மெய்ப்பொருளுண்மையான் நோக்குங்கால் அம் முழு முதல்வனின் உடம்பாக நிற்குந்திறத்தினை அறிவாயாக. மாறுதலின்றி என்றும் ஒரு நிலையாக நின்றருளும் திருவருளினை யல்லாமல் இனிமேல் தெரிந்துகொள்ளவேண்டிய வழி யாதுளது? (ஏதும் இல்லையென்பதாம்.)

     (வி - ம்.) "நிலம் நீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப் பகலோன், புலனாய மைந்தனோடு எண் வகையும்" முதல்வன் இயைந்து நின்றியக்கும் இயல்பினால் அவை அவன் திருமேனியென்று அணிந்துரைக்கப்படும். உயிர் - காற்று. மைந்தன் - ஆருயிர். விளக்கிருக்கும் இடமும் விளக்கெனக் கூறப்படுவது போன்று இவையனைத்தும் அவனேயானான் 1 என்று கூறப்படுவதுமுண்டு. அது புனைந்துரையேயாம். ஆனான் என்பது ஆக்கினான் என்பதாம்.

(2)
மெய்யான தன்மை விளங்கினால் யார்க்கேனும்
பொய்யான தன்மை பொருந்துமோ - ஐயாவே
மன்னும்நி ராசைஇன்னம் வந்ததல்ல உன்னடிமை
என்னும்நிலை எய்துமா றென்.
     (பொ - ள்.) அழகும் முதன்மையும் அழியாமையும் ஒருங்கமைந்த ஐயனே! திருவருளால் மெய்ப்பொருட்டன்மை மாசறுகாட்சியான் விளங்கினால், எத்தகையார்க்கும் நீங்கும் நிலைத்தாகிய பொய்த்தன்மை வந்து பொருந்துமோ? நிலைபெற்ற அவாவின்மையாகிய திண்மை

 1.  
'இருநிலனாய்த்.' 6. 94 - 1.
 2.  
" 'வானாகி.' 8. திருச்சதகம் - 15.