நோயும் வெங்கலிப் பேயுந் தொடரநின் | நூலிற் சொன்ன முறைஇய மாதிநான் | தோயும் வண்ணம் எனைக்காக்குங் காவலுந் | தொழும்பு கொள்ளுஞ் சுவாமியு நீகண்டாய் | ஓயுஞ் சன்மன் இனியஞ்சல் அஞ்சலென் | றுலகங்கண்டு தொழவோர் உருவிலே | தாயுந் தந்தையும் ஆனோய் சிரகிரித் | தாயு மான தயாபர மூர்த்தியே. |