ஊரனந் தம்பெற்ற பேரனந் தஞ்சுற்றும் | உறவனந் தம்வினையினால் | உடலனந் தஞ்செயும் வினையனந் தங்கருத் | தோஅனந் தம்பெற்றபேர் | சீரனந் தஞ்சொர்க்க நரகமும் அனந்தநற் | றெய்வமும் அனந்தபேதந் | திகழ்கின்ற சமயமும் அனந்தமத னால்ஞான | சிற்சத்தியா லுணர்ந்து | காரனந் தங்கோடி வருஷித்த தெனஅன்பர் | கண்ணும்விண் ணுந்தேக்கவே | கருதரிய ஆனந்த மழைபொழியும் முகிலைநங் | கடவுளைத் துரியவடிவைப் | பேரனந் தம்பேசி மறையனந் தஞ்சொலும் | பெரியமௌ னத்தின்வைப்பைப் | பேசரும் அனந்தபத ஞானஆ னந்தமாம் | பெரியபொரு ளைப்பணிகுவாம். |