பூரணி புராதனி சுமங்கலை சுதந்தரி | புராந்தகி த்ரியம்பகிஎழில் | புங்கவி விளங்குசிவ சங்கரி சகஸ்ரதள | புஷ்பமிசை வீற்றிருக்கும் | நாரணி மனாதீத நாயகி குணாதீத | நாதாந்த சத்திஎன்றுன் | நாமமே உச்சரித் திடுமடியர் நாமமே | நானுச்ச ரிக்கவசமோ | ஆரணி சடைக்கடவுள் ஆரணி எனப்புகழ | அகிலாண்ட கோடிஈன்ற | அன்னையே பின்னையுங் கன்னியென மறைபேசும் | ஆனந்த ரூபமயிலே | வாரணியும் இருகொங்கை மாதர்மகிழ் கங்கைபுகழ் | வளமருவு தேவைஅரசே | வரைரா சனுக்கிருகண் மணியாய் உதித்தமலை | வளர்காத லிப்பெண்உமையே. |