| "செழுந்தண் மால்வரை யெடுத்த செருவலி இராவண னலற |
| அழுந்த வூன்றிய விரலான் போற்றியென் பார்க்கல்ல தருளான் |
| கொழுங்க னிசுமந் துந்திக் குளிர்புனல் நிவாமல்கு கரைமேல் |
| அழுந்துஞ் சோலைநெல் வாயி லரத்துறை அடிகள் தம் அருளே." |
| - 2. 90 - . |
| "போற்றிசைத்துப் புனிதரருள் பெற்றுப்போந் தெவ்வுயிரும் |
| தோற்றுவித்த அயன்போற்றுந் தோணிபுரத் தந்தணனார் |
| ஏற்றுமிசை யேற்றுகந்த இறைவர்தமை ஏத்துதற்கு |
| நாற்றிசையோர் பரவுதிருக் குடமூக்கு நண்ணினார்." |
| - 12, சம்பந்தர் - 405. |
(குறிப்பு : மலர்தூவிப் போற்றுதலாகிய வழிபாட்டில் சிறந்த அருச்சனை தொடங்கும்போது ஓதிக்கொள்ள வேண்டிய திருமாமறைத் திருப்பாட்டுகள் இவையாகும். இதுபோன்று அருச்சனை முடிவில் அருட்கொடை வழங்குங் காலத்து ஓதவேண்டிய திருமாமறைத் திருப்பாட்டுகள் வருமாறு.)
| "சினமலி கரியுரி செய்தசிவ னுறைதரு திருமிழ லையைமிகு |
| தனமனர் சிரபுர நகரிறை தமிழ்விர கனதுரை யொருபதும் |
| மனமகிழ் வொடுபயில் பவரெழில் மலர்மகள் கலைமகள் செயமகள் |
| இனமலி புகழ்மகள் இசைதர விருநில னிடையினி தமர்வரே." |
| - 1. 20 - 11. |
| "தெருளு மெய்க்கலை விளங்கவும் பாருளோர் சிந்தை |
| இருளு நீங்கவும் எழுதுசொன் மறையளிப் பவர்தாம் |
| பொருளு ஞானமும் போகமும் போற்றி யென்பாருக் |
| கருளும் அங்கணர் திருவரத் துறையைவந் தணைந்தார்." |
| - 12. சம்பந்தர் - 224. |
தவத்தோர் முன்னிலையில் பகைப்பொருள் பகை மறந்து உறவாகி மகிழும்; அவர்கள்பால் தெய்வத் திருவருள் மேலோங்கி நிற்பதாலென்க. இவற்றை வருமாறுணர்க :
| "நலிவாரு மெலிவாரு முணர்வொன்றா நயத்தலினான் |
| மலிவாய்வெள் ளெயிற்றரவ மயின்மீது மருண்டுவிழுஞ் |
| சலியாத நிலையரியுந் தடங்கரியு முடன்சாரும் |
| புலிவாயின் மருங்கணையும் புல்வாய புல்வாயும்." |
| - 12.ஆனாயநாயனார், 34 |
| "செந்தழ லொளியிற் பொங்குந் தீபமா மரங்க ளாலும் |
| மந்திகள் முழையில் வைத்த மணிவிளக் கொளிக ளாலும் |
| ஐந்துமா றடக்கி யுள்ளார் அரும்பெருஞ் சோதி யாலும் |
| எந்தையார் திருக்கா ளத்தி மலையினில் இரவொன் றில்லை." |
| - 12. கண்ணப்பர், 131. |