பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


133


     (வி - ம்.) பார்-நிலம். இலயம்-ஒடுக்கம். வருஷித்தல்-பொழிதல். வீடை-ஆனேறு. தாரணை-பொறைநிலை. மேரு-பொன்மலை.

    அயன் மால் முதலிய தேவர்கள் என்று சொல்லப்படும் உயிரினங்கள் மாண்டு மடியுந் தன்மையரே. அவ்வுண்மை "நூறு கோடி பிரமர்கள்" எனத் தொடங்கும் (பக்கம் 18) திருமாமறையான் உணரலாம். பூதங்கள் ஒடுங்குங் காலத்துண்மையினை வருமாறுணர்க:

"உழிதரு காலும் கனலும் புனலொடு மண்ணும்விண்ணும்
 இழிதரு காலமெக் காலம் வருவது வந்ததற்பின்
 உழிதரு காலத்த உன்னடி யேன்செய்த வல்வினையைக்
 கழிதரு காலமு மாயவை காத்தெம்மைக் காப்பவனே."
- 8. மெய்யுணர்தல். 8.
    தாரணை யென்பது பொறைநிலை. அக்குறிப்பு வருமாறு :

"மனத்தினை யொருவழி நிறுப்பது பொறைநிலை"
- தொல்காப்பிய மேற்கோள்.
"நாலிரு வழக்கிற் றாபதப் பக்கமும்' - தொல். பொருள். 75.
    1. இயமம், 2. நியமம் 3. ஆசனம், 4. வளிநிலை, 5. தொகை நிலை, 6. பொறைநிலை. 7. நினைதல், 8. சமாதி.

    இயமம் - அடக்கம். நியமம் - நாட்கடன். ஆசனம் - இருக்கை.

"அரித்த வுடலைஐம் பூதத்தில் வைத்தப்
 பொருத்தஐம் பூதஞ்சத் தாதியிற் போந்து
 தெரிந்த மனாதிசத் தாதியிற் செல்லத்
 தரித்தது தாரணை தற்பரத் தோடே."
- 10. 577.
    சிவனருள் பெற்றோர் எந்நிலையிலுங் கலங்கார்;

"வானந் துளங்கிலென் மண்கம்ப மாகிலென் மால்வரையும்
 தானந் துளங்கித் தலைதடு மாறிலென் தண்கடலும்
 மீனம் படிலென் விரிசுடர் வீழிலென் வேலைநஞ்சுண்
 டூனமொன் றில்லா வொருவனுக் காட்பட்ட வுத்தமர்க்கே."
- 4. 113 - 8.
(3)