பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


156


         "அண்டபகி . . . . . . மானபரமே" -

     (வி - ம்) விகாரம் - வேறுபாடு.

    வானமுதலாகச் சொல்லப்படும் எண்பேர் வடிவமும் இறைவன் கொண்டருளும் நீங்கும் நிலையாகிய தடத்த வடிவத் திருமேனிகளாம் உண்மையை வருமாறுணர்க :

"தானே திசையொடு தேவரு மாய்நிற்கும்
 தானே உடலுயிர் தத்துவ மாய்நிற்கும்
 தானே கடல்மலை யாதியு மாய்நிற்கும்
 தானே உலகில் தலைவனு மாமே."
- 10 - 266.
"ஊனாயுயி ரானாயுட லானாயுல கானாய்
 வானாய்நில னானாய்கட லானாய்மலை யானாய்
 தேனார்பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூரருட்டுறையுள்
 ஆனாயுனக் காளாயினி யல்லேனென லாமே."
7. 1 - 7
(7)
பொய்யினேன் புலையினேன் கொலையினேன் நின்னருள்
    புலப்பட அறிந்துநிலையாப்
  புன்மையேன் கல்லாத தன்மையேன் நன்மைபோல்
    பொருளலாப் பொருளைநாடும்
வெய்யனேன் வெகுளியேன் வெறியனேன் சிறியனேன்
    வினையினேன் என்றென்னைநீ
  விட்டுவிட நினைவையேல் தட்டழிவ தல்லாது
    வேறுகதி யேதுபுகலாய்
துய்யனே மெய்யனே உயிரினுக் குயிரான
    துணைவனே யிணையொன்றிலாத்
  துரியனே துரியமுங் காணா அதீதனே
    சுருதிமுடி மீதிருந்த
ஐயனே அப்பனே எனும்அறிஞர் அறிவைவிட்
    டகலாத கருணைவடிவே
  அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி
    ஆனந்த மானபரமே.
     (பொ - ள்) "பொய்யினேன் . . . . . . என்னை" - (அடியேன்) பொல்லாப் பொய்கள் எல்லாமுடையேன்; (தன்னூன் பெருக்கற்குப் பிறி தூனுண்ணும் நசைமிக்க) புலைத்தொழிலை யுடையேன்; (புலாலுண்பது காரணமாகக்)