பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

185
"விண்ணிலுறை வானவரில் யாரடிப டாதவர்
    விரிஞ்சனரியே முதலினோர்
 மண்ணிலுறை மானவரில் யாரடிப டாதவர்
    மனுக்கண்முத லோர்களதலக்
 கண்ணிலுறை நாகர்களில் யாரடிப டாதவர்
    கட்செவிமகிபன் முதலோர்
 எண்ணில்பல யோனியிலும் யாரடிப டாதன
    இருந்துழியி ருந்துழியரோ."
"வேதமடி யுண்டன விரிந்தபல ஆகம
    விதங்களடி யுண்டன வோரைம்
 பூதமடி யுண்டன விநாழிகைமுதற் புகல்செய்
    பொழுதொடு சலிப்பில் பொருளின்
 பேதமடி யுண்டன பிறப்பிலி யிறப்பிலி
    பிறங்கலர சன்றன் மகளார்
 நாதனம லன்சமர வேடவடி வங்கொடு
    நரன்கை யடியுண்ட பொழுதே."
- பாரதம், அருச்சுனன், தவநிலை - 107-8.
    இறைவன் திருமுன் எல்லாம் நிகமும் இயல்பினால் இங்ஙனம் இறைசெயலே என்றுணர்த்தினர். எனினும் உண்மையான் நோக்குவார்க்கு தம்முனைப்பற்றுத் தாளிணை தலைமேற்கொண்டு சிவனுக்கு அடிமையாம் நற்றவம் எய்தினார் வாயிலாக நிகழும் செயல்மட்டுமே சிவன் செயலாகும். ஏனைய அவ்வவ்வுயிர்களின் செயலேயாம். மேய்ப்போன் மந்தையுடனும், பெற்றோர்கள் பிள்ளைகளுடனும், ஆசிரியர், மாணவருடனும், மேலாளர், அலுவலருடனும் விட்டு நீங்காது உடனாயிருப்பினும் நிகழும் செயல்களுக்குப் பொறுப்பாளி செயல்புரிந்தோரேயன்றி உடனாகவிருந்தோர் ரல்லர். இவ்வொப்பே இறைவன்பாலும் இயைத்துக் கொள்க.

(1)
 
அன்னே யனேயெனுஞ் சிலசமயம் நீ நின்னையே
    ஐயாஐயா என்னவே
  அலறிடுஞ் சிலசமயம் அல்லாது பேய்போல
    அலறியே யொன்றும் இலவாய்ப்
பின்னேதும் அறியாம லொன்றைவிட் டொன்றைப்
    பிதற்றிடுஞ் சிலசமயமேல்
  பேசரிய ஒளியென்றும் வெளியென்றும் நாதாதி
    பிறவுமே நிலயமென்றுந்