பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

20

என்பர். இவ்வுருத்திரன் அயன் மாலொடுங் கூட வைத்தெண்ணப் பட்டுக் குணதத்துவன் வைகுவோன் ஆவன் வைகுதல் - தங்கியிருத்தல். முதல்வனை இன்றி இவர்கட்கும் ஒரு செயலும் இல்லை என்னும் உண்மை வருந் திருப்பட்டா னுணர்க:

"கண்ணுதல் யோகி ருப்பக் காமன்நின் றிடவேட் கைக்கு
 விண்ணுறு தேவ ராதி மெலிந்தமை ஓரார் மால்தான்
 எண்ணிவேள் மதனை ஏவ எரிவிழித் திமவான் பெற்ற
 பெண்ணினைப் புணர்ந்து யிர்க்குப் பேரின்பம் அளித்த தோரார்."
- சிவஞானசித்தியார், 1. 2 - 25.
"அயன்தனை ஆதி ஆக அரனுரு என்ப தென்னை
 பயந்திடுஞ் சத்தி ஆதி பதிதலால் படைப்பு மூலம்
 முயன்றனர் இவரே யாயின் முன்னவன் என்னை முற்றும்
 நயந்திடும் அவன்இ வர்க்கு நண்ணுவ தொரோவொன் றாமே."
- சிவஞானசித்தியார், 1. 3 - 1.
"அறிந்திடும் ஆன்மா ஒன்றை ஒன்றினால் அறித லானும்
 அறிந்தவை மரத்த லானும் அறிவிக்க அறித லானும்
 அறிந்திடும் தன்னை யுந்தான் அறியாமை யானுந் தானே
 அறிந்திடும் அறிவன் அன்றாம் அறிவிக்க அறிவன்1 அன்றே."
- சிவஞானசித்தியார், 5. 2 - 2.
(3)
அண்டபகி ரண்டமும் மாயா விகாரமே
    அம்மாயை யில்லாமையே
  யாமெனவும் அறிவுமுண் டப்பாலும் அறிகின்ற
    அறிவினை யறிந்துபார்க்கின்
எண்டிசை விளக்குமொரு தெய்வஅரு ளல்லாமல்
    இல்லையெனு நினைவும் உண்டிங்(கு)
  யானென தறத்துரிய நிறைவாகி நிற்பதே
    இன்பமெனும் அன்பும் உண்டு
கண்டன எலாம்அல்ல என்றுகண் டனைசெய்து
    கருவிகர ணங்களோயக்
  கண்மூடி யொருகண மிருக்கஎன் றாற்பாழ்த்த
    கர்மங்கள் போராடுதே
 
 1. 
'ஆட்டுவித்தால்' 4. 95 - 3. 'போகியா' - 1. 2 - 22.