பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

215
பொன்றினதேன்முத்தியினைப் பெற்றவரார் புகல்நீ
    பொன்றுகையே முத்தியெனிற் புருடன் நித்தன் அன்றாம்
ஒன்றியிடும் நீரொடுநீர் சேர்ந்தாற்போல் என்னின்
    ஒருபொருளாம் அதிபதியோ டுயிர்பொருளொன் றன்றே."
- சிவஞானசித்தியார், 11. 2 - 2.
தாய்மொழியிற் காணும்வே தாகமங்கற் றுய்ப்பார்க்கு
வாய்மைப் பயனளிக்கும் வந்து.
தாம்பிறந்த நாட்டுநெறி சாரா தயன்மொழியோ
டாம்நெறிகள் சார்வார்க்கே தன்பு.
(7)
 
காயாத மரமீது கல்லேறு செல்லுமோ
    கடவுள்நீ யாங்களடியேங்
  கர்மபந் தத்தினாற் சன்மபந் தம்பெறக்
    கற்பித்த துன்னதருளே
வாயார வுண்டபேர் வாழ்த்துவதும் நொந்தபேர்
    வைவதுவும் எங்களுலக
  வாய்பாடு நிற்கநின் வைதிக ஒழுங்குநினை
    வாழ்த்தினாற் பெறுபேறுதான்
ஓயாது பெறுவரென முறையிட்ட தாற்பின்னர்
    உளறுவது கருமமன்றாம்
  உபயநெறி யீதென்னின் உசிதநெறி எந்தநெறி
    உலகிலே பிழைபொறுக்குந்
தாயான கருணையும் உனக்குண டெனக்கினிச்
    சஞ்சலங் கெடஅருள்செய்வாய்
  சர்வபரி பூரண அகண்டதத்துவமான
    சச்சிதா னந்தசிவமே.
     (பொ - ள்) "காயாத . . . வாய்பாடு" - (காய்த்துப் பயன் தரும் கவினார் மரமீது கல்லேறுபடும்; ஆனால்) காய்த்தலே இல்லாதபயனற்ற வெறுமரத்தின் மீது (கல்லெறிந்து பயனின்மையால்) கல்லெறிதல் செல்லுமோ? (செல்லாதென்பதாம்) (மெய்களனைத்தையும் உண்மை நிலையில் கடந்து நிற்றலாலும் உலகுயிர்களைச் செலுத்தலாகிய கடவுதலைச் செய்தலாலும் வழங்கும் திருப்பெயர்) கடவுள் நீ, அடியேங்கள் (கட்டாகிய பிறப்பினிலும் ஒட்டாகிய சிறப்பினிலும் ஆவிகள் நீங்கா) அடிமையேம்; வினைத்தொடக்கினால் பிறப்பின் தொடர்பு (மீண்டும் மீண்டும்) உண்டாகும்படி திட்டமிட்டு வைத்தது நின்திருவருளே. இன்புறும் பொருளை வயிறாரவுண்டு மகிழ்ந்த பேர்கள் (நின்திருவடியினை) வாயார வாழ்த்துதல் செய்வதும், (நல்வினைப்பே றின்மை யாலும்