பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

230
     "தேடரிய . . . ஆனந்தமே" -

     (வி - ம்.) பஞ்சு - பஞ்சுபோன்ற நொய்ம்மை. சங்கேதம் - ஏற்பாடு. "திருவருள் தோன்றாதவாறு வளர்த்தவர் எவர்" என்பதன் விளக்கம். ஆவிக்குச் செவ்விவாய்க்கப் பெறாமையால் முதல்வன்றன் திருவருட்கனிவு எய்தவில்லை யென்பதாம். எனவே முதல்வன் உள்ளங்கனிய யாம் திருமுறைகளை அருள் நினைவோடு ஓதி அருச்சித்து வாழ்த்திவணங்கி நன்னெறியில் ஒழுகுதல் வேண்டும்.1 அவ்வுண்மை வருமாறுணர்க:

"நல்லிசை ஞானசம் பந்தனு நாவினுக்
    கரசரும் பாடிய நற்றமிழ் மாலை
 சொல்லிய வேசொல்லி யேத்துகப் பானைத்
    தொண்ட னேனறி யாமை யறிந்து
 கல்லி யன்மனத் தைக்கசி வித்துக்
    கழலடி காட்டியென் களைகளை யறுக்கும்
 வல்லியல் வானவர் வணங்கநின் றானை
    வலிவ லந்தனில் வந்துகண் டேனே."
- 7. 68 - 5
(5)
 
பிரியாத தண்ணருட் சிவஞானி யாய்வந்து
    பேசரிய வாசியாலே
  பேரின்ப உண்மையை அளித்தனைஎன் மனதறப்
    பேரம்ப லக்கடவுளாய்
அறிவா யிருந்திடும் நாதவொலி காட்டியே
    அமிர்தப்ர வாகசித்தி
  அருளினைய லாதுதிரு அம்பலமு மாகிஎனை
    ஆண்டனைபின் எய்திநெறியாய்க்
குறிதா னளித்தனைநன் மரவுரிகொ ளந்தணக்
    கோலமாய் அசபாநலங்
  கூறினபின் மௌனியாய்ச் சும்மா இருக்கநெறி
    கூட்டினை எலாமிருக்கச்
சிறியேன் மயங்கிமிக அறிவின்மை யாவனோ
    தேடரிய சத்தாகிஎன்
  சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே
    தேசோ மயானந்தமே.
 
 1. 
'மெய்ம்மையாம்'. 4. 76 - 2.