முதலொலியாகிய நாதத்தை இயக்குவிக்கும் திருவருள் ஒலி, இவ்வொலி உணர்விலுறுவதன்றி உறுப்பிலுறுவதன்று. மேலும் இஃது உன்னாமல் உன்னும் உரைமந்திரம்; இஃது உடலினின்று வெளிப்போந்த உயிரினை மீண்டும் வருவித்து அவ்வுடலை எழச்செய்வதாம். அசபா உண்மையினை வருமாறுணர்க :"போற்றுகின் றேன்புகழ்ந் தும்புகல் ஞானத்தைத் தேற்றுகின் றேன்சிந்தை நாயகன் சேவடி சாற்றுகின் றேன்அறை யோசிவ யோகத்தை1 ஏற்றுகின் றேன்நம் பிரான்ஓர் எழுத்தே."- 10. 864. குறிக்கோளுடன் வாழ்தல் வேண்டும். அக் குறிக் கோளினையும் முதல்வரே உணர்த்தியருள வேண்டும். அவ்வுண்மை வருமாறு :"பாலனாய்க் கழிந்த நாளும் பனிமலர்க் கோதைமார்தம் மேலனாய்க் கழிந்த நாளு மெலிவொடு மூப்புவந்து கோலனாய்க் கழிந்த நாளும் குறிக்கோளி லாதுகெட்டேன் சேலுலாம் பழன வேலித் திருக்கொண்டீச் சரத்துளானே."- 4. 67 - 9. "கருவ னேகரு வாய்த்தெளி வார்க்கெலாம் ஒருவ னேயுயிர்ப் பாயுணர் வாய்நின்ற திருவ னேதிரு வீழி மிழலையுள் குருவ னேயடி யேனைக் குறிக்கொளே."- 5. 13 - 5. (6) ஆரா ரெனக்கென்ன போதித்தும் என்னஎன் அறிவினை மயக்கவசமோ அண்டகோ டிகளெலாங் கருப்பஅறை போலவும் அடுக்கடுக் காஅமைத்துப்பேராமல் நின்றபர வெளியிலே மனவெளி பிறங்குவத லாதொன்றினும் பின்னமுற மருவாது நன்னயத் தாலினிப் பேரின்ப முத்திநிலையுந் 1. 'உணர்வினேர்பெற'. 12. சம்பந்தர் - 161.
"போற்றுகின் றேன்புகழ்ந் தும்புகல் ஞானத்தைத் தேற்றுகின் றேன்சிந்தை நாயகன் சேவடி சாற்றுகின் றேன்அறை யோசிவ யோகத்தை1 ஏற்றுகின் றேன்நம் பிரான்ஓர் எழுத்தே."- 10. 864.
"பாலனாய்க் கழிந்த நாளும் பனிமலர்க் கோதைமார்தம் மேலனாய்க் கழிந்த நாளு மெலிவொடு மூப்புவந்து கோலனாய்க் கழிந்த நாளும் குறிக்கோளி லாதுகெட்டேன் சேலுலாம் பழன வேலித் திருக்கொண்டீச் சரத்துளானே."- 4. 67 - 9.
"கருவ னேகரு வாய்த்தெளி வார்க்கெலாம் ஒருவ னேயுயிர்ப் பாயுணர் வாய்நின்ற திருவ னேதிரு வீழி மிழலையுள் குருவ னேயடி யேனைக் குறிக்கொளே."- 5. 13 - 5.
ஆரா ரெனக்கென்ன போதித்தும் என்னஎன் அறிவினை மயக்கவசமோ அண்டகோ டிகளெலாங் கருப்பஅறை போலவும் அடுக்கடுக் காஅமைத்துப்பேராமல் நின்றபர வெளியிலே மனவெளி பிறங்குவத லாதொன்றினும் பின்னமுற மருவாது நன்னயத் தாலினிப் பேரின்ப முத்திநிலையுந்