பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

277
என்னும் முத்திறத்தார்க்குமாம். நாலாம் நிலையினராகிய அறிவினர்க்கு இம் மூன்றுங் கடந்த உணர்வு நிலையாம் என்க. இவ்வுண்மைகள் வருமாறு :

     1. கூத்தப் பெருமானும், 2. திருமூலத்தானமுடைய சிவலிங்கப்பெருமானும், 3. தில்லைத் திருச்சிற்றம்பலமா1கிய சிற்பரவியோ மமும் உள்ளன.

"உணர்வின் நேர்பெற வருஞ்சிவ
    போகத்தை2 ஒழிவின்றி உருவின்கண்
 அணையும் ஐம்பொறி அளவினும்
    எளிவர அருளினை எனப்போற்றி
 இணையில் வண்பெருங் கருணையே
    ஏத்திமுன் எடுத்தசொற் பதிகத்தில்
 புணரும் இன்னிசை பாடினர்
    ஆடினர் பொழிந்தனர் விழிமாரி."
- 12. சம்பந்தர், 161.
     "கன்னெஞ்சமு"டையாரும் தில்லை செல்லின் அம்மை யம்பல வாணன் திருவருள் தன்பால் ஈர்த்து ஆட்கொள்ளும். இது திரு முறைத்திருமாமறையினை மெய்யன்பர்கள் ஓவாது ஓதுமன்றின்கண் புக்கார் அம் மறையினை ஓதக்கேட்டு3 அதன்வண்ணம் ஆவதோடொக்கும். இவ்வுண்மை வருமாறு :

"வன்னெஞ்சக் கள்வன் மனலியன் என்னாதே
 கன்னெஞ் சுருக்கிக் கருணையினால் ஆண்டுகொண்ட
 அன்னந் திளைக்கும் அணிதில்லை யம்பலவன்
 பொன்னங் கழலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ."
- 8. திருக்கோத்தும்பி, 11.
     வன்னெஞ்சினும் வன்னெஞ்சமுடைய ஒருவர் வழிபட்ட வரலாறு வருமாறு :

     செய்வினையே தெய்வமெனச் செப்பியும் தெய்வங்கொள்கை சிறிது மில்லாது இறுமாந்து திரியும் சைமினி முனிவர் கன்னெஞ்சக் கடையவராவர். அவர் திருத்த நீர் மூழ்குதற் பொருட்டுப் பதிநடையாய்ப் புறப்பட்டனர். புறப்பட்டுப் பல நாடுகளுஞ் சுற்றித் திருத்தில்லை வழியாக வந்தனர். வரும் பொழுது திடீரென மருட்கையாகிய வியப்பும் வாலறிவின் வண்ணமும், விழுமிய மேலாம்முதன்மையும் ஒருங்கமைந்த கூத்தப் ரெமானாரைக் காணும் பேறு பெற்றனர். பெற்ற மாத்திரத்து அவர்தம் கன்னெஞ்சம் எதிர்பாராதவகையில் உருகுவதாயிற்று. ஐயகோ! இதுகாறும் தெய்வமில்லை யென என்

 
 1. 
'எம்பிரான்'. 8. திருச்சதகம் - 67.
 2. 
'அண்ணலார் தமக்' 12. சம்பந்தர் - 160.
 3. 
'கல்லுயர்'. 1. 117 - 12.