தேவர்தொழும் வாதவூர்த் தேவே என்பேன் | திருமூலத் தேவேஇச் சகத்தோர் முத்திக் | காவலுறச் சிவவென்வாக் குடனே வந்த | அரசேசும் மாலிருந்துன் அருளைச் சாரப் | பூவுலகில் வளரருணை கிரியே மற்றைப் | புண்ணியர்கா ளோவென்பேன் புரையொன் றில்லா | ஓவியம்போல் அசைவறவுந் தானே நிற்பேன் | ஓதரிய துயர்கெடவே யுரைக்கு முன்னே. |