பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

347
கண்ண கன்றஇக காசினி யூடெங்கும்
பெண்ணொ டாண்முத லாமென் பிறவியை
எண்ண வோஅரி தேழை கதிபெறும்
வண்ண முக்கண் மணிவந்து காக்குமே.
     (பொ - ள்) இடமகன்ற இவ்வுலகத்துள் எல்லா இடங்களிலும் அடியேன் அளவில்லாத பிறப்புப் பெண்ணாகவும், ஆணாகவும் இருவினைக்கீடாக மாறிமாறிப் பிறந்துள்ளேன். அங்ஙனம் பிறந்த எளியேன் பிறவியை எண்ணுவதென்றாலோ முடியாத தொன்றாகும். ஏழையாகிய நான் நன்னிலை பெறும் வண்ணம் மூன்று திருக்கண்களையுடைய செம்மணி வந்து காத்தருளுமே.

(56)
 
காக்கு நின்னருட் காட்சியல் லாலொரு
போக்கு மில்லையென் புந்திக் கிலேசத்தை
நீக்கி யாளுகை நின்பரம் அன்பினர்
ஆக்க மேமுக்கண் ஆனந்த மூர்த்தியே.
     (பொ - ள்) மெய்யன்பினர்களுடைய பிரிவிலருட் பெருஞ்செல்வமே! மூன்று திருக்கண்களையுடைய பேரின்பப் பெரு வடிவமே! எஞ்ஞான்றும் இடையறாது காத்தருளும் நின் திருவருட் காட்சியல்லாமல், அடியேனுக்கு நிலைத்த புகலிடம் பிறிதொன்றில்லை. எளியேனுடைய மன வருத்தத்தை நீக்கி ஆண்டருளுவது நின் பொறுப்பாகும்.

     காட்சி - தெரிசனம். போக்கு - புகல். புந்தி - மனம். கிலேசம் - வருத்தம். பரம் - பொறுப்பு. ஆக்கம் - திருவடிச் செல்வம். மூர்த்தி - வடிவினன்.

(57)
 
ஆனந் தங்கதி என்னவென் னானந்த
மோனஞ் சொன்ன முறைபெற முக்கண்எங்
கோனிங் கீந்த குறிப்பத னால்வெறுந்
தீனன் செய்கை திருவருட் செய்கையே.
     (பொ - ள்) அழியாப் பேரின்பமே அடைக்கலமென்னத் தெரியவும், எளியேனுக்குப் பேரின்பப் பெருவாயிலாம் உரையற்ற மோனத்தை அருளிச் செய்த முறைமையிலே அடையவும் மூன்று திருக்கண்களையுடைய எம் தலைவன் (உணர்வினுக்குணர்வாய் நின்று) ஈந்தருளிய திருவருட்டிருக்குறிப்பினால், ஒன்றுக்கும் பற்றாத ஏழையேன் வழியாக நிகழும் செய்கை (எழுதுகோலின் செய்கை எழுதுவோன் செய்கை போன்று) திருவருட் செய்கையேயாம்.
(58)
 
கையி னால்தொழு தேத்திக் கசிந்துளம்
மெய்யி னாலுனைக் காண விரும்பினேன்