(பொ - ள்) யாண்டும் ஆருயிரை விட்டு நீங்காது அவ்வுயிர்க்கு உயிராய் வேறறக் கலந்தோங்கும் செறிவே, மிக்கோங்கிப் பேரின்பம் அருளும் அறிவே, பேரின்பப் பெருவடிவாம் சிவனே.
(வி - ம்.) பிரியாதுயிர்க்குயிராய் நின்றருள்வது சீலமெனவும், பின்னமற வோங்குவது நோன்பெனவும், ஒருபுடையொப்பாகக் கொள்ளின் எஞ்சிய செறிவும் அறிவும் அடுத்துவருவன காணலாம். சிவன் ஆவிப் பேறாகிய பேரின்பத் துய்ப்பு நிலையென்க. அப்பர் முதலிய நன்னெறி நால்வரருளிய நற்றமிழ் நான்மறை நாற்படி விளக்கும் திருமுறையாகவும் திருச்சிற்றம்பலக் கோவையார் ஆவிப்பேறாகவும் கொள்ப.
(339)
ஏதேது சொன்னாலும் எள்ளளவும் நீயிரங்காச் | சூதே தெனக்குளவு சொல்லாய் பராபரமே. |
(பொ - ள்) அடியேனுடைய குறைகளை எல்லாம் எவ்வெவ்வகையாக எத்துணைமுறை எடுத்துக் கூறினாலும் நாயனீரே! நும்திருவுள்ளம்