(பொ - ள்.) திருவருளாகிய, பேரழகினை வாய்ந்த சிவன்நுகர்வு இனி இவர்க்கே என்று உலகம் பாராட்டும்படி திருக்கையில் உழவாரப் படை 2 ஏந்தியருளிய "நாவுக்கரசர்" திருவடிக்குப் பேரன்பு பூண்டு ஒழுகும் நாள் எந்நாளோ?
(2)
பித்தரிறை என்றறிந்து பேதைபால் தூதனுப்பு
வித்த தமிழச்சமர்த்தர் மெய்புகழ்வ தெந்நாளோ.
(பொ - ள்.) சிவனடியார்பால் பேரன்பு பூண்டொழுகும் பித்தர் சிவபெருமானென்று உள்ளத்துணர்ந்து, பரவை நாய்ச்சியாரிடத்துத் தூதராக 3 அனுப்பு வைத்தருளிய தனித்தமிழின்கண் மிக்க திறல் வாய்ந்த "நம்பியாரூரர்" பொருள்சேர் புகழினை எடுத்து மொழிந்தின்புறுவ தெந்நாளோ? பித்து - பேரன்பு; மிக்க ஈடுபாடு.