பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


80


வென்று பிறப்பறுக்கச் சாத்தியவீ ரக்கழலும்
ஒன்றும்உருத் தோன்றாம லுள்ளடக்கி-என்றும்
இறவாத இன்பத் தெமைஇருத்த வேண்டிப்
பிறவா முதல்வன் பிறந்து"-போற்றிப்பஃறொடை.
திருவடிசூட்டுந் திறம் வருமாறு :

"திருவடி வைத்தென் சிரத்தருள் நோக்கிப்
 பெருவடி வைத்தந்த பேர்நந்தி தன்னைக்
 குருவடி விற்கண்ட கோனையெங் கோவைக்
 கருவழி வாற்றிடக் கண்டுகொண் டேனே." -10.1571.
"திருவடி ஞானஞ் சிவமாக்கு விக்குந்
 திருவடி ஞானஞ் சிவலோகஞ் சேர்க்குந்
 திருவடி ஞானஞ் சிறைமல மீட்குந்
 திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே."-10.1572.
"சிந்தையிலும் என்றன் சிரத்தினிலும் சேரும்வண்ணம்
 வந்தவனை மண்ணிடைநாம் வாராமல்-தந்தவனை
 மாதினுடன் எத்திறமும் வாழ்ந்திருக்க என்பதலால்
 ஏதுசொலி வாழ்த்துவே னியான்."
- திருக்களிற்றுப்படியார், 100.
(9)
போதமாய் ஆதிநடு அந்தமும் இலாததாய்ப்
    புனிதமாய் அவிகாரமாய்ப்
  போக்குவர வில்லாத இன்பமாய் நின்றநின்
    பூரணம் புகலிடமதா
ஆதரவு வையாமல் அறிவினை மறைப்பதுநின்
    அருள்பின்னும் அறிவின்மைதீர்த்
  தறிவித்து நிற்பதுநின் அருளாகில் எளியனேற்
    கறிவாவ தேதறிவிலா
ஏதம்வரு வகையேது வினையேது வினைதனக்
    கீடான காயமேதென்
  இச்சா சுதந்தரஞ் சிறிதுமிலை இகபரம்
    இரண்டினுள் மலைவுதீரத்
தீதிலருள் கொண்டினி யுணர்த்தியெனை யாள்வையோ
    சித்தாந்த முத்திமுதலே
  சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே
    சின்மயா னந்தகுருவே.