மின்னனைய பொய்யுடலை நிலையென்றும் மையிலகு | விழிகொண்டு மையல்பூட்டும் | மின்னார்க ளின்பமே மெய்யென்றும் வளர்மாட | மேல்வீடு சொர்க்கமென்றும் | பொன்னையழி யாதுவளர் பொருளென்று போற்றிஇப் | பொய்வேட மிகுதிகாட்டிப் | பொறையறிவு துறவீதல் ஆதிநற் குணமெலாம் | போக்கிலே போகவிட்டுத் | தன்னிகரி லோபாதி பாழ்ம்பேய் பிடித்திடத் | தரணிமிசை லோகாயதன் | சமயநடை சாராமல் வேதாந்த சித்தாந்த | சமரச சிவாநுபூதி | மன்னவொரு சொற்கொண் டெனைத்தடுத் தாண்டன்பின் | வாழ்வித்த ஞானகுருவே | மந்த்ரகுரு வேயோக தந்த்ரகுரு வேமூலன் | மரபில்வரு மௌனகுருவே. |