பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

167
"காத்தாள் பவர்காவ லிகழ்ந்தமையாற்
    கரைநின்றவர் கண்டுகொ ளென்றுசொல்லி
 நீத்தா யகயம்புக நூக்கியிட
    நிலைக்கொள்ளும் வழித்துறை யொன்றறியேன்
 வார்த்தையிது வொப்பது கேட்டறியேன்
    வயிற்றோ டுதுடக்கி முடக்கியிட
 ஆர்த்தார்புன லாரதிகைக் கெடில
    வீரட்டா னத்துறை யம்மானே."
- 4. 1. 5.
(3)
 
என்பெலாம் நெக்குடைய ரோமஞ் சிலிர்ப்பஉடல்
    இளகமன தழலின்மெழுகாய்
  இடையறா துருகவரு மழைபோ லிரங்கியே
    இருவிழிகள் நீரிறைப்ப
அன்பினால் மூர்ச்சித்த அன்பருக் கங்ஙனே
    அமிர்தசஞ் சீவிபோல்வந்
  தானந்த மழைபொழிவை உள்ளன்பி லாதஎனை
    யார்க்காக அடிமைகொண்டாய்
புன்புலால் மயிர்தோல் நரம்பென்பு மொய்த்திடு
    புலைக்குடிலில் அருவருப்புப்
  பொய்யல்ல வேஇதனை மெய்யென்று நம்பிஎன்
    புந்திசெலு மோபாழிலே
துன்பமா யலையவோ உலகநடை ஐயவொரு
    சொற்பனத் திலும்வேண்டிலேன்
  சுத்தநிர்க் குணமான பரதெய்வ மேபரஞ்
    சோதியே சுகவாரியே.
     (பொ - ள்) " என்பெலா . . . பொழிவை" - எலும்புகளனைத்தும் நெகிழ்ந்து உடையவும் மயிர்கூர்ச் செறியவும், உடம்பு நெகிழவும், நெஞ்சமானது தீயினைக் கண்ட மெழுகுபோன்று ஓவாதுள்ளுருகவும் (கழிவிரக்கங்கொள்ளும் வருத்தமேலீட்டினால்) வருந்தி இருகண்களினின்று இடையறாது நீர்சொரியவும் (இறவாத இன்ப) மெய்யன்பினால் உயிர்ப்படங்கி நிற்கின்ற உண்மையன்பருக்கு அப்பொழுதே அவ்விடத்தே ஆருயிர் தளிர்க்கச் செய்யும் அமிழ்தமருந்தென வந்தருளி நின் திருவடிப் பேரின்பப் பெருமழையினைப் பொழிந்தருள்வை.

     "உள்ளன்பு . . . அல்லவே" - வேண்டத்தக்க உள்ளன்பு சிறிதுமில்லாத அடியேனை எவர்பொருட்டு அடிமைகொண்டருளினை; தாழ்வான ஊனும், மயிரும், தோலும், நரம்பும், எலும்பும், நிறைந்திருக்கிற,