பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

173
உணர்த்துமுறை அதிட்டானமுறை யென்றும், ஆவேசமுறையென்றும் இருவகைப்படும். இவற்றுள் அதிட்டானமுறை ஆருயிரின் அகத்தே முதல்வன் நின்று செவ்விய அவ்வுயிரைக் கருவியாகக் கொண்டுரைத்தல். ஆவேசபக்கம் அம் முதல்வன் அவ் வுயிரின் புறத்துமேல் நின்று தானேயுரைத்தல். இதனை வருமாறுணர்க :

ஆனேற்றை மேய்த்த வதிட்டானம் ஆவேசம்
ஆனேற்றை யூர்வ தறி.
     ஆசையற்றவர்களே சிவனடியுறைவர் என்னுமுண்மை "ஆசையறு மின்கள்" (பக்கம், 86) என்னும் திருமந்திரத்தானுணர்க

     மூச்சடக்கும் முறையால் முதல்வன் அருளொளி அகத்தே தோன்ற இன்பமெய்தும், அல்லாதது துன்பமாம். இவ்வுண்மை வருமாறுணர்க :

"காற்றினை மாற்றிக் கருத்தைக் கருத்தினில்
 ஆற்றுவ தாற்றலென் றுந்தீபற
 அல்லாத தல்லாதென் றுந்தீபற"
- திருவுந்தியார், 22
     மெய்யடியார்கள் தன்னைமறந்து தலைவனை நினைந்து தலைவன் ஆட்ட ஆடுதலால் அவர்கள் உலகோரால் பேய்த்தொடக்குற்றார் எனப் பேசப்படுவர். இவ்வுண்மை வருமாறு :

"சகம்பேய் என்று தம்மைச் சிரிப்ப"
- 8. போற்றி - 18.
"சூடகந் தோள்வளை ஆர்ப்ப ஆர்ப்ப
    தொண்டர் குழாமெழுந் தார்ப்ப ஆர்ப்ப
 நாடவர் நந்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப
    நாமும் அவர்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப
 பாடக மெல்லடி யார்க்கு மங்கை
    பங்கினன் எங்கள் பராப ரனுக்கு
 ஆடக மாமலை அன்ன கோவுக்
    காடப்பொற் சுண்ணம் இடித்து நாமே."
- 8. பொற். 7.
(6)
 
அரும்பொனே மணியேஎன் அன்பேஎன் அன்பான
    அறிவேஎன் அறிவிலூறும்
  ஆனந்த வெள்ளமே என்றென்று பாடினேன்
    ஆடினேன் நாடிநாடி
விரும்பியே கூவினேன் உலறினேன் அலறினேன்
    மெய்சிலிர்த் திருகைகூப்பி
  விண்மாரி எனஎனிரு கண்மாரி பெய்யவே
    வேசற் றயர்ந்தேனியான்