பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

187
"காலமே கடவு ளாகக் கண்டனந் தொழிலுக் கென்னின்
 காலமோ அறிவின் றாகும் ஆயினும் காரி யங்கள்
 காலமே தரவே காண்டும் காரணன் விதியி னுக்குக்
 காலமுங் கடவு ளேவ லால்துணைக் கார ணங்காண்."
- , 1.1 - 9.
"போக்கொடு வரவு காலம் ஒன்றினில் புணர்வ தின்றி
 ஆக்கவே றொருவ ரின்றி அனாதியாய் அணுக்க ளாகி
 நீக்கிடா வினையிற் கூடி நிலமுத லாக நீடி
 ஊக்கமா ருலகம் என்றும் உள்ளதென் றுரைக்க லாமே."
-சிவஞானசித்தியார், பரபக்கம், பாட்டா - 8.
(2)
 
வேதமுடன் ஆகம புராணமிதி காசமுதல்
    வேறுமுள கலைகளெல்லாம்
  மிக்காக அத்துவித துவித மார்க்கத்தையே
    விரிவா யெடுத்துரைக்கும்
ஓதரிய துவிதமே அத்துவித ஞானத்தை
    உண்டுபணு ஞானமாகும்
  ஊகம்அனு பவவசன மூன்றுக்கும் ஒவ்வுமீ
    துலகவா திகள்சம்மதம்
ஆதலி னெனக்கினிச் சரியையா திகள்போதும்
    யாதொன்று பாவிக்கநான்
  அதுவாதலா லுன்னை நானென்று பாவிக்கின்
    அத்துவித மார்க்கமுறலாம்
ஏதுபா வித்திடினும் அதுவாகி வந்தருள்செய்
    எந்தைநீ குறையுமுண்டோ
  இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
    எங்குநிறை கின்றபொருளே.
     (பொ - ள்) "வேதமுட . . . ஆகும்" - (உலகியலொழுக்கங்களை நிலவச் செய்யும் வாழ்க்கை நூலாகிய) மறைகளும், (திருக்கோவில் திருவுரு, பூசை, பொருளுண்மை முதலியன விளக்கும் வழிபாட்டு நூலாகிய) முறைகளும், பழங்கதை யெனப்படும் புராணங்களும், மன்னர் வரலாறுகளும், இவை முதலாகச் சொல்லப்படும் வேறுள்ள கலைகளனைத்தும், மிகுதியாக இருபொருட்டன்மையாகிய துவிதமும், இரண்டற்ற புணர்ப்புத் தன்மையாகிய அத்துவிதமும் விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்து இயம்புகின்றன. சொல்ல வொண்ணாததாகிய இரண்டிணை புணர்ப்பாம் அத்துவித மெய்யுணர்வை, இருபொருளுணர்வாம் துவித உணர்வே உண்டுபண்ணும் உணர்வாகும்.