அருளாகிய முதல்வன் திருவாணையின்றிக் காரியப்பாடு எய்துவதில்லை என்பதே. அங்ஙனமன்றி மாயை என்பது இல்பொருளென்றோ, அல்லது அருளே மாயா காரியப் பொருள்களாகிய உலகமும் உலகியற் பொருள்களுமாகத் திரிந்ததென்றோ கூறுவது சிறிதும் பொருந்தாது.
மாயையின் உண்மையினை வரும் திருப்பாட்டுகளானுணர்க:
| "அருவினி லுருவந் தோன்றி அங்காங்கி பாவ மாகி |
| உருவினி லுருவ மாயே உதித்திடும் உலக மெல்லாம் |
| பெருகிடும் சுருங்கும் பேதா பேதமோ டபேத மாகும்1 |
| ஒருவனே யெல்லா மாகி அல்லவாய் உடனு மாவன்." |
| - சிவஞானசித்தியார், 1. 1 - 27. |
முதல்வன் ஆணையினால் நிகழும் இவ்வுலகியல் நிகழ்ச்சி ஆருயிர்களின் மலப்பிணிப்பால் நேர்ந்துள்ள பெருந் துன்பத்தினைப் போக்கித் தன் திருவடியாகிய அளவில் பேரின்பினை அவ்வுயிர்கள் துய்த்தற் பொருட்டேயாம். அவ்வுண்மை வருமாறு காண்க:
| "ஏற்றஇவை அரனருளின் திருவிளையாட் டாக |
| இயம்புவர்கள் அணுக்களிடர்க் கடல்நின்றும் எடுத்தே |
| ஊற்றமிக அருள்புரிதல் ஏது வாக |
| உரைசெய்வர் ஒடுக்கம்இளைப் பொழித்தல்2 மற்றைத் |
| தோற்றமல பாகம்வரக் காத்தல் போகம் |
| துய்ப்பித்தல் திரோதாயி நிறுத்த லாகும் |
| போற்றலரும் அருள் அருளே அன்றி மற்றுப் |
| புகன்றவையும் அருளொழியப் புகலொ ணாதே." |
| - சிவப்பிரகாசம், 18. |
ஆருயிரின் அன்பினை ஏற்று ஆண்டவன் இன்பமளிக்கின்றான் அவ்வுயிர்க்கு. அதனால் அன்பின் விளைவே இன்பமென்ப.
| "மாறிநின் றென்னை மயக்கிடும் வஞ்சப் |
| புலனைந்தின் வழியடைத் தமுதே |
| ஊறிநின் றென்னுள் எழுபரஞ் சோதி |
| உள்ளவா காணவந் தருளாய் |
| தேறலின் தெளிவே சிவபெரு மானே |
| திருப்பெருந் துறையுறை சிவனே |
| ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த |
| இன்பமே என்னுடை அன்பே." |
| - 8. கோயிற்றிருப் - 1. |
செருக்கற்றா லன்றிச் செம்மலர் நோன்றாளைச் சேர ஒண்ணாது. அவ்வுண்மை வருமாறு காண்க :
1. | 'நித்தமாய்.' - சிவஞானசித்தியார், 2. 3 - 3. |
2. | 'அழிப்பிளைப்.' - சிவஞானசித்தியார், 1. 2 - 9. |