பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

238
மின்போலும் இடையொடியும் ஒடியுமென மொழிதல்போல்
    மென்சிலம் பொலிகளார்ப்ப
  வீங்கிப் புடைத்துவிழு சுமையன்ன கொங்கைமட
    மின்னார்கள் பின்ஆவலால்
என்போல் அலைந்தவர்கள் கற்றார்கள் கல்லார்கள்
    இருவர்களில் ஒருவருண்டோ
  என்செய்கேன் அம்மம்ம என்பாவம் என்கொடுமை
    ஏதென் றெடுத்துமொழிவேன்
அன்பால் வியந்துருகி அடியற்ற மரமென்ன
    அடியிலே வீழ்ந்துவீழ்ந்தெம்
  அடிகளே யுமதடிமை யாங்களெனு நால்வருக்
    கறமாதி பொருளுரைப்பத்
தென்பாலின் முகமாகி வடவா லிருக்கின்ற
    செல்வமே சத்தாகிஎன்
  சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே
    தேசோ மயானந்தமே.
     (பொ - ள்) "மின்போலு . . . உண்டோ" - மின்னலைப்போன்று (உண்டோ இல்லையோ என்று) காண்டற்கரிய இடையானது (மேலுள்ள கொங்கைப்பாரத்தினைச் சுமக்கமாட்டாது) ஒடிந்து விடும் ஒடிந்து விடும்என்று முறையிட்டுச் சொல்லுவது போன்று (நல்லார்) காலில் அணிந்துள்ள பொற்சிலம்புகள் விடாது ஒலித்துக்கொண்டிருப்ப (கச்சறநிமிர்ந்து கதிர்த்துமுன்) பணைத்து (எய்த்திடை வருந்த எழுந்து) புடைபரந்து (சின்னாளில் வெறும் பைபோல) தளர்ந்தொழியாநின்ற பெரும்பாரத்தை யொத்த கொங்கைகளையுடைய இளமை பொருந்திய மாதர்களின்பின் பெருவேட்கையுடையவனாய், எளியேனைப்போன்று அலைந்து திரிந்து வருந்தியவர்கள், கற்றவர்கள் கல்லாதவர்கள் எனப்படும் இருதிறத்தாருள் ஒருவராயினும் உளரோ?

     "என்செய்கேன் . . . மொழிவேன்" - அடியேன் யாது செய்வேன்; ஐயோ! ஐயோ! எளியேனுடைய கடும்பாவம், கொடுமைகளை என்ன வகையாகவுள்ளன வென்று எடுத்துக் கூறுவேன்;

     "அன்பால் . . . செல்வமே" - பேரன்பினால் வாழ்த்தி மனங்கரைந்து வேரற்ற மரம் போலத் திருவடியிலே விழுந்து விழுந்து, எங்கட்கு (அகம்புறமாய் யாண்டும் இன்புறுத்தியருளும் அடிகளே! அடியேங்கள் உம்திருவடிக்குக் (கட்டு ஒட்டு ஆகிய இரண்டிடத்திலும் விட்டு நீங்காத) கடப்பாடுடைய அடிமைகள், என்று மனமார விண்ணப்பிக்கும் (சனகன், சனந்தனன், சனாதனன், சனற்குமாரன் என்னும்) நால்வருக்கும் (திருவுள்ளங் கனிந்து) அறமுதலாம் நாற்பொருளை