பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

394
மின்னைப் போன்றன அகிலமென் றறிந்துமெய்ப் பொருளாம்
உன்னைப் போன்றநற் பரம்பொருள் இல்லையென் றோர்ந்து
பொன்னைப் போன்றநின் போதங்கொண் டுன்பணி பொருந்தா
என்னைப் போன்றுள ஏழையர் ஐயஇங் கெவரே.
    (பொ - ள்.) (அனைத்துலகமும் நிலையாமைத் தன்மையின் மின்னலை யொத்தே காணப்படும்) மின்னலைப் போன்று எல்லாவுலகமும் நின்று மறையும் நிலையாமையையுடையன. இவ்வுண்மையினை நூலுணர்வானும் நுண்ணுணர்வானும் அறிதற்குரியாரை அடுத்து அறிந்தவர் நின் திருவடிப்பேறு போன்று நல்ல மேலாம் பொருள் வேறொன்றும் இல்லையென்று ஆராய்ந்தறிந்தவர்க்குப் பொன்போல் சுடர்ந்து விளங்கும் நின் மூதறிவு கொண்டு உன் திருவடிப்பணியினைப் பொருந்தும் நற்றவமில்லாத எளியேனைப் போன்ற பேதையர் வேறு எவர்? ஐயனே! (எவரும் இலர் என்பதாம்.)

(19)
தாயுந் தந்தையும் எனக்குற வாவதுஞ் சாற்றின்
ஆயும் நீயும்நின் அருளும்நின் அடியரும் என்றோ
பேய னேன்திரு வடியிணைத் தாமரை பிடித்தேன்
நாய னேஎனை ஆளுடை முக்கண்நா யகனே.
    (பொ - ள்.) தாயாகவும், தந்தையாகவும் தக்க உறவாகவும் 1 நின்று முறையே துணைபுரிவார் மெய்யுணர்ந்தோரான் உணரப்படும் (சிவன்) நீயும், நின் திருவருளாம் சிவையும், நின் திருமேனியாம் சிவனடியார்களுமே யாவர். பேய்போன்ற அடியேன் நின்திருவடியிணையாகிய தாமரையினை நின்திருவருளால் கைக் கொண்டேன்: அடியேனுக்குரிய முதல்வனே! அடியேனை ஆட்கொண்டருளும் முக்கண் நாயகனே!

(20.)
காந்தமதை எதிர்காணிற் கருந்தாது
    செல்லுமக் காந்தத் தொன்றா
தோய்ந்தவிடம் எங்கேதான் அங்கேதான்
    சலிப்பறவும் இருக்கு மாபோல்
சாந்தபதப் பரம்பொருளே பற்றுபொரு
    ளிருக்குமத்தாற் சலிக்குஞ் சித்தம்
வாய்ந்தபொருள் இல்லையெனிற் பேசாமை
    நின்றநிலை வாய்க்கு மன்றே.
    (பொ - ள்.) காந்தத்தினை எதிர்காணுந் தன்மை வாய்க்கப் பெற்றால் கருந்தா தெனப்படும் இரும்பு அக் காந்தத்திற்கு முன்

 1. 
'அப்பனீ.' 6. 95 - 1.